பாஸ்போட் தொலைந்ததால் கனடாவில் இருந்து இலங்கை பெண் நாடு கடத்தல் !
பின்னர் நாமே அதற்கு பொறுப்பு என்று கூறி, எம்மை பலிகடா ஆக்குவார்கள். இமிகிரேஷன் அலுவலகத்தில் இவ்வாறு பல தமிழர்களது ஆவணங்கள் தொலைந்துபோய் இருகிறது. அதுபோலவே ஜனீனாவுக்கும் நடந்துள்ளது. இருப்பினும் வன்கூவருக்கு அருகில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே காத்திருந்த பொலிசார், அவரை திடீரெனக் கைதுசெய்து, கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த உள்ளார்கள்.கணவரின் வேண்டுகோளையும் அவர்கள் ஏற்க்க மறுத்துவிட்டார்கள். இவை அனைத்திற்கும் ஆவணம் தொலைந்துபோனதே காரணம் ஆகும். இருப்பினும் கனேடிய பிரஜை ஒருவரை மணம் முடித்து 2 பிள்ளைகளையும் பெற்று, அன் நாட்டில் சுமார் 14 வருடம் குடியிருந்த , பெண் ஒருவரை இவ்வாறு திடீர் என்று எவ்வாறு நாடுகடத்த முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
பாஸ்போட் தொலைந்தால், குறித்த நபர் அன் நாட்டில் எத்தனை வருடம் இருந்துள்ளார் என்று கண்டறிய முடியாத நிலை தோன்றுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.