புனித நீக்கிலார் திருவிழாவை முன்னிட்டு நாவாந்துறை சென்.நீக்கிலஸ் சனசமூக நிலையத்தால் இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்களில் றேம்சன் நாவாந்துறை சென்.நிக்கிலஸ் விளையாட்டுக் கழகத்ததை பிரதிநிதித்துவம் செய்கின்றார். சாந்தன்
குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்த்தவர்.நாவாந்துறை சென்.நீக்கிலஸ் சனசமூக நிலையத்தின் தலைவர் ஆ.தயான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாவாந்துறை பங்குதந்தை சோபன் கலந்துகொண்டார்.
விருந்தினர்களாக யாழ். மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி மோகனதாஸ், யாழ். கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் எஸ்.அன்ரனிப்பிள்ளை, வடமாகாண சபை உறுப்பினரும் விளையாட்டுத்துறை இணைப்பளருமான இ.ஆனல்ட் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜெ-84 கிராம சேவகர் சர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்