புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2019

கர்ப்பப்பை அகற்ற சென்ற பெண்ணுக்கு கையை அகற்றிய மருத்துவர்கள்

பெண் ஒருவர் கர்ப்பப் பையை அகற்றுவதற்குப் பதிலாக, கை ஒன்று அகற்றப்பட்டமை தொடர்பில், உடனடி விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.சுகாதார அமைச்சரால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைப் பிரிவினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக விசேட நிபுணர் குழுவொன்று மாரவில வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.
பெண் ஒருவர் கர்ப்பப் பையை அகற்றுவதற்குப் பதிலாக, கை ஒன்று அகற்றப்பட்டமை தொடர்பில், உடனடி விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சரால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைப் பிரிவினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக விசேட நிபுணர் குழுவொன்று மாரவில வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிர்மலா லோகநாதன், ''78 வயதுடைய பெண்ணொருவர், ஜுலை மாதம் 20ஆம் திகதி தனது கர்ப்பப்பையை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள், குறித்த நோயாளியின் வயது, ஏனைய நோய் தன்மைகள் குறித்தும் இதனால் சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் ஆபத்து குறித்தும் இந்தப் பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும் ​நோயாளியான பெண்ணும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சத்திரசிகிச்சைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, ஜூலை 22ஆம் திகதி குறித்த பெண்ணின் கர்ப்பப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதுடன், ஏற்கனவே வைத்தியர்களின் எச்சரிக்கை​க்கமைய, பெண்ணின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டவுடன், அவர் மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இரத்த உறைவு காரணமாக, அப்பெண்ணின் ஒரு கை நீல நிறமாக மாறி செயலற்றுப் போயுள்ளது.

இதனையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டதுடன் 24ஆம் திகதி செயலற்ற கையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெண்ணின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாலேயே அவரது கை அகற்றப்பட்டதாகவும், குறித்த சத்திரசிகிச்சை நிறைவடைந்து 14 நாள்கள் கடந்துள்ள நிலையிலும், அப்பெண் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சைப்​ பெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பணிப்பாளர், இந்தச் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை ஊடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad