.jpg) வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் பாராளுமுன்ற உறுப்பினர்கள் ஐவருடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். |
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பதிவில், தமிழ்த் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடுவதில் பெருமையடைகிறேன். உண்மை, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக இலங்கை பாடுபடுவதால், அதிகாரப்பகிர்வு, காணி திரும்பப் பெறுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான பதில்களைக் கண்டறிதல், பாரிய புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். |