புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2025

மட்டக்களப்பில் நிரம்பி வழியும் குளங்கள் - வான்கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ளக்காடு! [Monday 2025-01-20 06:00]

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான் கதவுகள் 9 அடிக்கு திறக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான் கதவுகள் 9 அடிக்கு திறக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

தொடர் மழையினால் மாவட்டத்திலுள்ள நவகிரிகுளம், புனாணை அனைக்கட்டு, வடமுனைக்குளம், வெலியாகண்டிய குளம், றூகம்குளம். வாகனேரிகுளம், கட்டுமுறிவுக்குளம், போன்ற குளங்களில் நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து அந்தந்தக் குளங்களின் தேவைக்கு ஏற்றவாறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதேவேளை உன்னிச்சைக் குளத்தின் நீர் மட்டம் 34 அடிக்கு உயர்ந்ததையடுத்து குளத்தின் 3 வான் கதவுகள் தலா 6 அடி உயரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மழை பெய்து குளத்தின் வான்கதவுகள் மேலும் அதிகளவில் திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என அதன் நீர்பாசனத் திணைக்களப் பொறியிலாளர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த உன்னிச்சைகுளத்தின் வான் கதவு திறக்கப்பட்டதையடுத்து வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வேளாண்மைகள் யாவும் பாதிப்படைந்துள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகள் வு வெள்ளத்தால் மூழ்கும் அபாய நிலை தோன்றியுள்ளதுடன் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றை அண்டிய மற்றும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் நீர் மட்டம் அதிகரித்தால் தாழ்நில பகுதிகளிலுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் குளங்கள், நீர் நிலைகள், கடல், ஆறுகளில் நீராடுவதை தவிர்க்குமாறும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அவதானமாகச் செயற்படுமாறும் மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

ad

ad