ஒட்டுமொத்த காவல்துறையையும் திகிலில் உறைய வைத்திருக்கிறது அந்த சம்பவம்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல்நிலைய எஸ்.ஐ. கணேசனுக்கு கடந்த 9-ந் தேதி, அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்ட சேந்தநாட்டில், சத்யா என்ற உறவுக்காரப் பெண்ணோடு திருமணம் நடந்தது. கல்யாணத்துக்காக லீவு போட்டிருந்த மாப்பிள்ளை கணேசன், தன் புது மனைவியோடு தன் சேந்தநாடு வீட்டிலேயே ஹனிமூன் கொண்டாடினார்.
கல்யாணம் ஆன ஒரு வாரத்திலேயே ஆடி பிறந்ததால், பெண் வீட்டார் 16-ந் தேதி ஆடிவரிசை செய்து, புதுப்பெண் சத்யாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆடி மாதம் பிரித்த போதும், கணேசனும் சத்யாவும் ’"எழுந்தாச்சா? காபி குடிச்சாச்சா? சாப்பிட்டாச்சா?' என மாறி மாறி அன்பை பரிமாறியபடியே இருந்தனர். இந்த நிலையில் சேந்தநாட்டில் இருந்த கணேசனுக்கு, ஒரு அழைப்புவர அவர் 21-ந் தேதி சொந்த ஊரில் இருந்து அரக்கப் பரக்க சிதம்பரத்துக்குப் புறப்பட்டார்.
22-ந் தேதி செவ்வாய்க் கிழமை இரவு 8 மணியளவில், எஸ்.ஐ.கணேசனை, ‘"சாப்பிட்டாச்சா?' என விசாரிக்க, அவரது புது மனைவி சத்யா தொடர்பு கொள்ள முயன்றார். ரிங் போய்க்கொண்டே இருந்தது. அதனால் சிதம்பரத்தில் இருக்கும் உறவுக்காரரான மணிகண்டனைத் தொடர்பு கொண்டு, "அவுங்க போனை எடுக்க மாட்டேங்கறாங்க. என்ன ஆச்சுன்னு தெரியலை. பயமா இருக்கு' என்று சத்யா சொல்ல, அந்த மணிகண்டன், சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் இருக்கும் சக்கரா அவென்யூ சுகம் அப்பார்ட்மெண்ட் ஸில் இருக்கும் எஸ்.ஐ.கணேசனின் வீட்டுக்குப் போனார். உள்ளே லைட் எரிந்தது. ஃபேன் ஓடியது. ஜன்னலில் எட்டிப் பார்த்த மணிகண்டன், அதிர்ந்துபோனார். உள்ளே கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் கணேசன். போலீஸுக்குத் தகவல் பறந்தது.
டி.எஸ்.பி.ராஜாராம் உள்ளிட்டோர் ஸ்பாட்டுக்கு வந்தனர். அக்கம் பக்கத்தில் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது பக்கத்து வீட்டுப் பெண்மணி ""வழக்கமா இங்க வந்துபோகும் பெண்தான் வந்தாங்க. கொஞ்ச நேரத் துக்கு முன்னதான் இங்க இருந்து கிளம்பிப் போனாங்க'' என்றார். அங்க அடையாளம் கேட்டார் டி.எஸ்.பி. ""ஆள் கவர்ச்சியா, கட்டா, சிவப்பா இருப்பாங்க. இன்னைக்குப் பச்சைக் கலர் புடவை கட்டியிருந்தாங்க'' என்றார். போலீஸ் டீம் பஸ் நிலையத்தில் விசாரிக்க, ஒரு ஆட்டோ டிரைவர் ‘""ஓ, எஸ்.ஐ.கூட வருவாங்களே அவங்களா? கொஞ்சம் முன்னடிதான் சேலம் பஸ்ல ஏறினாங்க'' என்று சொல்ல, விருத்தாசலம் டி.எஸ்.பி. வெங்கடேச னைத் தொடர்புகொண்டு ‘சேலம் பஸ்ஸில், பச்சைக்கலர் புடவை கட்னவளைத் தூக்குங்க'' என்றார் கடலூர் டி.எஸ்.பி.ராஜாராம். போலீஸ் டீம் விருத்தாசலம் பஸ் ஸ்டாண்ட் அருகே அந்த பஸ்ஸை வழிமறித்தது. பச்சைப் புடவை வனிதாவைக் கீழே இறக்கிவிட்டு, டி.எஸ்.பி.ராஜா ராமுக்குத் தகவல் கொடுக்க, ""அவளை பரங்கிப்பேட்டை ஸ்டேஷனுக்குக் கொண்டுவாங்க'' என்றார் அவர்.
ஸ்லிவ்லஸ் ஜாக்கெட்டில் கவர்ச்சியாக இருந்த வனிதா, போதையில் இருப்பது தெரிந்தது. வனிதா முதலில் வாய்திறக்க மறுக்க, இன்ஸ்பெக்டர் தீபா, கன்னத்தில் அறைந்தார். இன்ஸ்பெக்டர் உதயகுமார் லத்தியால் காலில் ரெண்டு போடுபோட்டார்.
""எம்பேரு வனிதா. வயசு 25. கிள்ளைக்கு பக்கத்துல இருக்கும் அம்பலதடிகுப்பம்தான் என் ஊர். நான் செண்ட்ரிங் வேலைசெய்யும் கலைமணியைக் காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்களுக்கு 9 வயதில் மகன் இருக்கான். இடையில் மினிபஸ் கண்டக்டர் சார் லஸ் எனக்கு நட்பானார். சார்லஸோட போகும் போதெல்லாம், நான் முஸ்லிம் பெண் மாதிரி பர்தா போட்டுக்கிட்டுப் போவேன். ஒருநாள் பின்னலூர் முஸ் லிம் இளைஞர்கள் எங்களை மறிச்சி, ""ஏண்டி முஸ்லீம் பொண்ணான நீ, வேற மதப் பயலோட போறியா''ன்னு பிரச்சினை பண்ணினாங்க. அப்ப நான் இந்துதான்னு சொல்ல, அதுக்கு ""ஏண்டி பர்தா போட்டு எங்கள் மதத்தை கேவலப்படுத்தறே?''ன்னு கிள்ளை போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்தாங்க. அப்ப அங்க எஸ்.ஐ.யா இருந்த கணேசன் வந்தார். அவர் பார்வை என் மேலேயே இருந்தது. என்னை மாயப் புன்னகை யோடு அனுப்பிவச்சிட்டார்.
எஸ்.ஐ. கணேசனைப் பற்றி விசாரித்தபோது, அவரது சித்தப்பா கோவிந்தசாமி ""கணேசனின் அப்பா அம்மா இறந்துட்டாங்க. நான்தான் அவனை வளர்த்தேன். அவன் தப்பானவன் இல்லை. போலீசில் சேர கடுமையா உழைச்சான். பயிற்சி காலத்தில் அனைத்திலும் முதலிடம் வந்தான். அவனுக்கு கல்யாணம் பண்ணிவச்சி 13 நாள்தான் ஆகுது, அதுக்குள்ள இப்படி ஆயிடிச்சே. ஒரு எஸ்.ஐ.க்கே இந்த நிலைன்னா சாதாரண மக்களுக்கு என்ன பாது காப்பு?'' என்றார் கண்ணீரோடு.
கணேசனின் புது மனைவி சத்யாவோ ""எங்க மணமாலை வாடுறதுக்குள்ள, என் தாலியை அந்த சண்டாளி அறுத்துட்டாளே. பேசிப் பழகி, ஒட்டி உறவாடி இப்படிப் பண்ண அவளுக்கு எப்படி மனசு வந்தது, அந்தப் பாவியைத் தூக்கில் போட ணும். அவ துடிதுடிச்சி சாகணும். என் வாழ்க்கை ஒரே வாரத்தில் கேள்விக்குறியாயிடிச்சே'' என அந்த நிலையிலும் கணவனை விட்டுக்கொடுக்கா மல், தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
கணேசன் எஸ்.ஐ.யைப் பொறுத்தவரை, அவரது சபலத்தின் மறுபக்கம் மரணமாகிவிட்டது. அவரது கதை, சபலக் காக்கிகளுக்குப் பாடம்.
-காசி
கடலூர் புதுநகரில் ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். தென்மாவட்டத்தைச் சேர்ந்த இவரது குடும்பம், அங்கேயே இருக்க, இவர் மட்டும் காவலர் குடியிருப்பில் தனியாகத் தங்கியிருந்தார். பெர்ஃப்யூம் மணக்க வளையவரும் அவர், மகளிர் காக்கிகள் தொடங்கி, ஏட்டம்மா, பெண் எஸ்.ஐ. என பலரையும் வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போய் காவலர் குடியிருப்பில் இருக்கும் பெண்களையும் இவர் குறிவைக்க, மேலதிகாரிகளிடம் இவரைப் பற்றிப் புகார் கொடுத்து விழுப்புரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யவைத்தனர் சக காக்கிகள். அதேபோல் கருவேப்பிலங்குறிச்சியில் எஸ்.ஐ.யாக இருந்தவர், ஃபாரினுக்குப் போன ஒருவரின் மனைவியை ஆக்கிரமித்துக் கொண்டார். விவகாரம் கணவர் காதுக்கு போக, ஊருக்கு ரிட்டர்ன் ஆனவர், அந்த சபல எஸ்.ஐ.யைப் போட்டுத் தள்ள ரூட் போட்டார். இது மேலதிகாரிகளின் கவனத்துக்குப் போக, அதன் பிறகு அந்த எஸ்.ஐ. தூக்கியடிக்கப்பட்டுவிட்டார். ’எஸ்.ஐ.கணேசனின் சபல லீலைகளைப் பற்றிய புகார்கள் பரபரப்பாகக் கிளம்பியபோதும், எஸ்.பி.இன்ஸ்பெக்டர் சுரேஷ்கண்ணா, நிலைமையின் தீவிரத்தை மேலதிகாரிகளுக்கு கொண்டுபோகாமல் விட்டுவிட்டார். அதனால் டி.ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி. போன்றோர் கணேசனை லேசாகக் கண்டித்து அனுப்பிவிட்டனர்’ என்று சொல்லும் காக்கிகள் ‘கண்டித்ததோடு கணேசனை பக்கத்து மாவட்டங்களுக்கு மாற்றியிருந்தால், இந்தக் கொலையே நடந்திருக்காது’ என்கிறார்கள் ஆதங்கமாய். |