
புங்குடுதீவு மக்களது முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் தமிழரசுக்கட்சி பிரமுகரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான வி.ரி.தமிழ்மாறனை விடுவிக்க பேச்சுக்கள் தொடர்கின்றன.வடபிராந்திய பொலிஸ்மா அதிபரது வாகனத்தினுள் சிக்குண்டுள்ள அவரை மீட்டெடுக்க கடந்த நாலுமணி நேரமாக பேச்சுக்கள் தொடர்கின்ற போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லைஇது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் புங்குடுதீவில்
இந்நிலையினில் புங்குடுதீவினில் இயல்பு நிலையினை ஏற்படுத்துவது தொடர்பினில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் மாவை.சேனாதிராசா, வி.ரி.தமிழ்மாறன் ஆகியோர் பங்கெடுக்கும் கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பெருமளவிலான புங்குடுதீவ பொதுமக்கள் இக்கூட்டத்தினில் கலந்து கொண்டிருந்தனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளை அங்கிருந்தவர்கள் சிலருக்கு வந்திருந்த தொலைபேசி அழைப்பினில் குறித்த சுவிஸ் நபர் வெளிநாட்டிற்கு தப்பித்து செல்ல முற்பட்டுள்ளதாகவும் வெள்ளவத்தையினில் அவரைகண்டு தாம் தாக்கிய போது தப்பித்து ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்