சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு
வீரமிகு
விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை,
கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள்
06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக
நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து
கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈ
கைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் கலை பண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டது.

உயிராயுதங்களின் வீரத்தியாகத்தினை மையமாகக் கொண்ட உயிரம்புகள் திரைப்படத்தின் வீரம் செறிந்த முக்கியகாட்சி அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டதுடன், எழுச்சி நிகழ்வுகளாக கவிதை, எழுச்சிப்பாடல்கள், இளையோர்களின் இனஉணர்வு மிக்க எழுச்சி நடனங்கள், காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புப் பேச்சுக்களும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.






சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈ
கைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் கலை பண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டது.
உயிராயுதங்களின் வீரத்தியாகத்தினை மையமாகக் கொண்ட உயிரம்புகள் திரைப்படத்தின் வீரம் செறிந்த முக்கியகாட்சி அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டதுடன், எழுச்சி நிகழ்வுகளாக கவிதை, எழுச்சிப்பாடல்கள், இளையோர்களின் இனஉணர்வு மிக்க எழுச்சி நடனங்கள், காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புப் பேச்சுக்களும் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.