ஒரு மாதம் பரோலில் விடுவிக்க கோரி நளினி மனு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி, உடல் நலம் பாதித்த தனது தந்தையை அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக ஒரு மாதம் பரோலில் விடுவிக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நளினி மனுவுக்கு பிப்ரவரி 11 ஆம் தேதி சிறைத்துறை அதிகாரிகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.