-
23 ஜூலை, 2026
குமாரசாமி மகேந்திரன் pungs 3

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 413 வட்டக்கச்சி இராமநாதபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும், இல. 42, வைரவ கோயில், வைரவபுளியங்குளம் வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேந்திரன் அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஜினி, சுபாஸ்கரன், லதாஜினி, தனிஸ்கரன், தபோஜினி(ஜேர்மனி), ரூபாயினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரன்(நாதன்), பிரசாந்தி, சுதாகரன், வதனா, கஜேந்திரன்(ஜேர்மனி), பிரதீபன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணேசலிங்கம், சறோஜினிதேவி, சிவோஜினி(வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பாலச்சந்திரன், சிவனேசன் மற்றும் தபோநிதி, ஈசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, தண்டாயுதபாணி, காலஞ்சென்ற கருணாநிதி, பாலசிங்கம், காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையக்கரசி, தெய்வேந்திரன், சாரதாதேவி, புஸ்பராணி, தயாபரன் மற்றும் தங்கராசா(கிளிநொச்சி), சிவயோகம்(வவுனியா), சிவமலர்தேவி(லண்டன்), விஜயராணி(கனடா), இந்திராணி(கனடா), சந்திரபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்வியா, திவ்வியன், சரூன், யஸ்வினி, யனிசா, யஸ்விகா, டிலக்சன், நிக்சன், லதுசன், ஆருசன், ஆருசா, தவிசா(ஜேர்மனி), அனிக்கா, அத்விகா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேப்பங்குளம், தெட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94771984316
- Mobile : +94772487055
- Mobile : +4917624742499
கண்ணீர் அஞ்சலிகள்
| இன்று 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு! [Wednesday 2026-07-22 18:00] |
![]() செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது |
| செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை கோரி கவனயீர்ப்பு போராட்டம்! [Wednesday 2026-07-22 18:00] |
![]() செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. |
| உள்ளத்தால் ஏற்கின்றேன்- நான் உறுதிமொழி தரமுடியாது! [Wednesday 2026-07-22 18:00] |
![]() நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல என்பது எமக்கு தெரியும் இதனை எனது உள்ளத்தால் ஏற்கின்றேன் நான் உறுதி மொழிதரமுடியாது ஆனால் என்னால் உங்களின்துன்ப துயரங்களை அறிவோம் உங்கள் பிரச்சினைகளை என்னால் முடிந்தவரையும் ஐ.நா சபையிலும், மனித உரிமைகளை பேணம் நாடுகளிடமும் உங்கள் பிரச்சினையை எடுத்து கூறுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் தலையையிலான குழுவினர் எடுத்ரைத்துள்ளனர். |
21 ஜூலை, 2026
www.pungudutivuswiss.com
| மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது! [Monday 2026-07-20 19:00] |
![]() இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது |
| செம்மணிப் புதைகுழியில் இன்றும் 8 என்புக்கூடுகள் அடையாளம்! [Monday 2026-07-20 19:00] |
![]() செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. இதன்போது, புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது |
19 ஜூலை, 2026
| போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை பரிமாறிக் கொண்ட உக்ரைன் -ரஷ்யா! [Saturday 2026-07-18 07:00] |
![]() போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் அவ்வப்போது பரிமாறிக் கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை போர்க்களத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் முறைப்படி பரிமாறிக் கொண்டுள்ளனர். |
18 ஜூலை, 2026
| சுமந்திரன் பிரதம விருந்தினரா? - சுழிபுரம் விக்டோரியா கல்லூரி பழைய மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டம்! [Saturday 2026-07-18 20:00] |
![]() சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். |
| செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள்! [Saturday 2026-07-18 20:00] |
![]() யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு இலங்கை வருகை தரவுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| சங்கு கூட்டணி- தமிழரசு தலைவர்கள் சந்திப்பு! [Saturday 2026-07-18 20:00] |
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
| செம்மணிப் புதைகுழியில் இன்றும் 6 என்புக்கூடுகள் அடையாளம்! [Saturday 2026-07-18 20:00] |
![]() செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று நடைபெற்றன. இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. |
| TGTE Condemns Deployment of Sri Lankan Security Forces to Haiti Calls on the United Nations to Apply Its Human Rights Due Diligence Policy [Friday 2026-07-17 16:00] |
![]() The Transnational Government of Tamil Eelam (TGTE) today expressed its profound concern and unequivocal opposition to the deployment of 1,132 Sri Lankan military and police personnel to Haiti as part of the United Nations-authorized Multinational Security Support (MSS) mission. |
| பிரதி அமைச்சர், ஆளும்கட்சி எம்.பிக்கு பிடியாணை! [Friday 2026-07-17 16:00] |
![]() நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) உத்தரவிட்டுள்ளார் |
17 ஜூலை, 2026
| சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப்: உலகை அதிர வைத்த ஈரான்! [Friday 2026-07-17 16:00] |
![]() அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. |
| “தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம்” - விஜய்க்கு எதிராக வெடித்த சீமான்! [Friday 2026-07-17 07:00] |
![]() இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று, முதலமைச்சர் விஜய்யை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி நெறியாளர் விஜயன், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள அவர், திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் |
| சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை! [Friday 2026-07-17 07:00] |
![]() கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. |
| சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டது பாரிய அச்சுறுத்தல்! [Friday 2026-07-17 07:00] |
![]() அனுராதபுர காலத்துக்கு முந்தைய சோழர் ஆக்கிரமிப்புக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தமிழ் நாகரிகம் மற்றும் தாயகக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்காகச் சுமந்திரன் சமர்ப்பித்த முன்மொழிவை எவ்வித ஆய்வுகளுமின்றித் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளமையானது நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் எனத் தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ குற்றம் சாட்டியுள்ளார். |
15 ஜூலை, 2026
| 21வது நாளாகத் தொடர்ந்த போராட்டம்! [Wednesday 2026-07-15 06:00] |
![]() முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 21ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. |
| நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன- நீதிமன்றில் வெளியான தகவல்கள்! [Wednesday 2026-07-15 06:00] |
![]() சமீபத்தில் மோதல் வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் நடத்தப்பட்ட விசாரணைகளில் 271 வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளது. |
| ஜனாதிபதிக்கு பிரான்ஸ் விசா மறுக்கப்பட்டதா? [Wednesday 2026-07-15 06:00] |
![]() ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். |
9 ஜூலை, 2026
நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 8 அதிகாரிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
8 ஜூலை, 2026
செம்மணிப் புதைகுழிகள் குறித்து சந்திரிகாவிடம் விசாரணை நடத்த வேண்டும்! [Wednesday 2026-07-08 19:00]
![]() செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முறையான விசாரணைகளை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். |
கஜேந்திரகுமாரின் ஆசனம் மாற்றப்பட்டது! [Wednesday 2026-07-08 19:00]
![]() பாராளுமன்ற ஆசன வரிசையில் தனது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்த கோரிக்கையை அடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது. |
7 ஜூலை, 2026
கண்ணீருடன் விடைபெற்றார்: உலகக்கோப்பையில் ரொனால்டோ வசமுள்ள 2 சாதனைகள்
| உயிரிழந்த கைதிகளை அடையாளம் காண நடவடிக்கை- கொழும்பு வைத்தியசாலையில் பலரது நிலை கவலைக்கிடம்! [Tuesday 2026-07-07 08:00] |
![]() நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர் |
6 ஜூலை, 2026
| சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் பதவி பறிப்பு வர்த்தமானிக்கு இடைக்கால தடை கட்டளை வழங்க மறுப்பு! [Monday 2026-07-06 17:00] |
![]() சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. |
| நீர்கொழும்பு சிறையில் பெரும் கலவரம்- 26 பேர் பலி! [Monday 2026-07-06 17:00] |
![]() நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றுகாலை மீண்டும் இடம்பெற்ற கலவரங்களில் 26 பேர் உயிரிழந்ததுடன் 100இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் |
| காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி மரணம்! [Monday 2026-07-06 17:00] |
![]() நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி, இந்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. கைதிகள் உள்ளிட்ட இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. |
2 ஜூலை, 2026
பிற கட்சி நிர்வாகிகள் இணைப்பு விழா! – கார்ப்பரேட் பாணியில் விழா ஏற்பாடு செய்த த.வெ.க
| வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! [Wednesday 2026-07-01 18:00] |
![]() வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
28 ஜூன், 2026
பிரான்சில் ஸ்கைடைவர்ஸை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி!
கிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில், ஸ்கைடைவர்ஸை ஏற்றிச்
25 ஜூன், 2026
வவுனியா முதல்வர்:சாவகச்சேரி –பிரதி தவிசாளர் வெளியே!
16 ஜூன், 2026
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு! [Monday 2026-06-15 16:00
![]() முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார். கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி சங்கீதா, தனது கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். |
| 5 படுகொலைகள் குறித்த வழக்கு- பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவு! [Monday 2026-06-15 16:00] |
![]() மட்டக்களப்பில் ஐந்து படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிள்ளையான் உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் |

.jpg)

























