-
18 ஆக., 2026
தமிழிசை இலக்கணத்தின்படி, பண்கள் அவை பாடப்பட வேண்டிய காலத்தின் அடிப்படையில் மூன்று முதன்மைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:
- பகற்பண்: பகல் பொழுதில் பாடுவதற்கு உரியவை (உதாரணம்: நட்டபாடை, சீகாமரம், தக்கராகம்).
- இராப்பண்: இரவுப் பொழுதில் பாடுவதற்கு உரியவை (உதாரணம்: கொல்லி, இந்தளம், கௌசிகம்).
- பொதுப்பண்: பகல், இரவு என இரு வேளைகளிலும் எந்நேரமும் பாடக்கூடியவை (உதாரணம்: செந்துருத்தி, யாழ்முறி).
பத்துப்பாடல்கள் கொண்ட தொகுப்பைப் ‘பதிகம்’ என்று கூறுவர். இது முன்னரே விளக்கப்பட்டது. மூவர் தேவாரங்கள் பதிக அமைப்பை உடையன. திருஞானசம்பந்தர் பதிகங்களில் பதிகத்தை ஓதுவதால் விளையும் பயன் கூறும் ஒரு பாடலும் பதிக இறுதியில் இடம் பெற்றுள்ளது. இதனைத் ‘திருக்கடைக்காப்பு’ என்று கூறுவர். மற்றைய இருவர் பதிகங்களில் சிலவற்றைத் தவிர ஏனைய பதிகங்கள் பத்துப்பாடல்கள் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. தேவார மூவரும் பல சிவத்தலங்களில் சென்று பாடியிருந்தாலும், அவற்றை எல்லாம் தொகுத்துப் பண்களின் அடிப்படையில் ஒழுங்கு செய்துள்ளனர். இதனைப் ‘பண்முறை’ என்று கூறுவர். மூவர் தேவாரங்களைத் தலமுறையிலும் தொகுத்துள்ளனர். ஒரே தலத்தில் பலரும் பாடிய பாடல்களை ஒழுங்கு அமைத்தலைத் 'தலமுறை' என்றனர். ஏழு திருமுறைகள் என்ற தொகுப்புப் பண்முறையிலேயே அமைந்தது. அதாவது, ஓர் ஆசிரியர் வெவ்வேறு தலங்களில் பாடியிருந்தாலும், ஒரே பண்ணில் அமைந்த பதிகங்கள் தொகுக்கப்பட்டுத் திருமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன..1.3 தேவாரப்பண்கள் தேவாரத்தில் இடம் பெற்றுள்ள பண்கள் இருபத்து ஒன்று. இதனைப் ‘பந்தத்தால்’ என்று தொடங்கும் திருக்கழுமலம் (சீகாழி) பதிகத்தில் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார். பின்வந்தோர் பண்களை இருபத்து நான்கு என்றும் இருபத்து ஏழு என்றும் பிரித்துக் கூறினர். இவற்றைப் பகற்பண்கள், இராப்பண்கள், பொதுப் பண்கள் என மூன்றாகப் பிரிப்பர். பகற்பண்கள் பத்து. இராப்பண்கள் எட்டு. பொதுப்பண்கள் மூன்று. (இவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் விரிவாகக் காணலாம்.) | ||
பகற்பண்கள்-10 | இராப்பண்கள்-8 | பொதுப்பண்கள்-3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
இவற்றுள் செவ்வழிப்பண் திருஞான சம்பந்தரால் மட்டுமே பாடப்பட்டுள்ளது. செந்துருத்தியைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மட்டுமே பாடியுள்ளார். திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் என்பவை திருநாவுக்கரசரால் மட்டுமே பாடப்பட்டுள்ளன. |
| ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது! [Monday 2026-08-17 17:00] |
![]() ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13-ம் தேதி அங்குள்ள கடைக்கு அவர் சென்றார். வெளியே வந்தபோது வாசலில் இருந்த குப்பைத் தொட்டி வெடித்துச் சிதறியதில் ராபர்ட் ஷகீவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ரஷ்ய போலீஸார் ஆய்வு செய்தனர். |
| போதைப்பொருள் விவகாரம்: சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த திமுக! [Monday 2026-08-17 17:00] |
![]() போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில், இன்று கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்டது தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளது. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர் |
17 ஆக., 2026
| ஈரான் அறிவித்த பெரும் பணப்பரிசு: ட்ரம்ப் தொடர்பில் அதிகரித்த பதற்றம்! [Monday 2026-08-17 07:00] |
![]() அமெரிக்க வீரர்களைப் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ பெரும் பணப்பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கப் படைகளை உயிருடன் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ ஈரான் அதிரவைக்கும் வகையிலான பணப் பரிசை அறிவித்துள்ளது. அத்துடன், ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் அந்தப் பரிசுத் தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. |
| நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்! [Monday 2026-08-17 07:00] |
![]() வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) சிறப்பாக இடம்பெற்றது. |
| கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது! [Monday 2026-08-17 07:00] |
![]() பிரபல பாதாள உலக தலைவர் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் அவர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படுவார் என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். |




