கொடுமையிலும் கொடுமை
-
13 டிச., 2013
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா
ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் ராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை புறக்கணித்து விட்டு, தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்க மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
கசினோவில் 150 மில்லியன் முதலீடு செய்துள்ள அமைச்சர் வீரவன்சவின் மனைவி
தேசப்பற்றாளர் என தன்னை அடையாளப்படுத்தி அரசியல் நடத்திவரும் தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவரும், வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, 150 மில்லியன் ரூபா பணத்தை கசினோ சூதாட்ட மையத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள்
இனி வரும்காலங்களில் பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; வடக்கு முதல்வர்
சட்ட திட்டங்களைக் குறைகூறிக்கொண்டு பதவிகளைப் பாதுகாக்க நாங்கள் ஆட்சிப்பீடம் வரவில்லை வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம்.
கணவனைக் கொலை செய்து மலசலக் குளியில் போட்ட மனைவிக்கு மரண தண்டனை!
கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவி மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற
வடக்கில் சகல நடவடிக்கைகளிலிருந்தும் இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும்; சலோகா பெயானி
சிறிலங்காவின் வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான
டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கெஜ்ரிவாலின் கட்சிக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 எம்எல்ஏக்களின் பலம் வேண்டும். பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள், சுயேட்சைக்கு 2 இடங்கள் கிடைத்தன.
சட்டமன்றத்தில் மிகப் பெரும் கட்சி என்ற நிலையில் இருக்கும் பாஜகவை ஆட்சியமைக்க அல்லது நிலவும் தேக்க நிலையை மாற்ற பாஜக முயலவேண்டும் என்று கூறி துணை நிலை ஆளுநர்
வங்காளதேச போர்க்குற்றவாளி அப்துல் காதர் மொல்லா தூக்கில் போடப்பட்டார்!
பங்களாதேஷ் பாகிஸ்தானிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற நடத்திய போரில், மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட, இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா சற்று முன்னர் தூக்கிலிடப்பட்டார். இவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் சற்றுமுன்னர் தூக்கிலிடப்பட்டதாக, வங்கதேசத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது. முல்லாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையின் மீது நீதிமன்ற மேல் முறையீட்டை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர் தூக்கிலிடப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்திருந்தன. போர்க்குற்றங்களுக்காக ஒரு அரசியல் தலைவர் தூக்கில் போடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)