சென்னையில் மதிமுக உயர்நிலைக்கூட்டம்
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக்கூட்டம் எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை மது ஒழிப்பு பிரசார நடைப்பயணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.