திருப்பதி : இலவச தரிசன பக்தர்கள் இனி கூண்டுக்குள் காத்திருக்க வேண்டியதில்லை
திருமலையில் தரிசன முறை பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்-1 மற்றும் 2-ல் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா கலந்து கொண்டு பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட், வி.வி.ஐ.பி., வி.ஐ.பி. பிரிவுகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் சாமி