-
28 பிப்., 2023
யாழ்ப்பாணத்தில் கொவிட் இடைத்தங்கல் நிலைய முறைகேடு விசாரணை ஆரம்பம்! [Tuesday 2023-02-28 06:00]
யாழ்ப்பாணத்தில் கொரோனா காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் நிலையங்களில் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சினால் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது |
பிரான்சில் காணாமல் போன தமிழர் மரணம்!
சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸில் காணாமல் போனதாக காவல்துறையினரால் தேடப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியது தவறு!
பிரதமர் பதவியை மீளப் பொறுப்பேற்கவுள்ளேன் என்று வெளிவரும் செய்தி தொடர்பில் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதே தவறு என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார் |
பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த ஜேவிபி வேட்பாளர் மரணம்
தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார் |
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுமா தமிழ் காங்கிரஸ்? - சீண்டுகிறார் செல்வம்.
மாகாணசபை முறைமையை எதிர்க்கும் தமிழ் காங்கிரஸ் கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவார்களா. அல்லது எதிர்த்து நிற்பார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் |
இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் - உலக வங்கி அறிவிப்பு!
இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக நாணய பரிமாற்ற வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர் வழங்குவதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான இன்டர்நஷனல் ஃபைனான்ஸ் கோர்ப்பரேஷன் அறிவித்துள்ளது |