புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2013

சென்னையில் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதல் அமைச்சர்
சென்னை சாந்தோமில் நடந்த பயங்கர விபத்தில் புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி உயிர் தப்பினார். அடையாறு நோக்கி சென்ற ரங்கசாமியின் கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்ந்த விபத்தில் ரங்கசாமி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்தினால் சாந்தோம் பட்டினப்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
சென்னையில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி போலீசார், மணக்கோலத்தில் இருந்த மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 
பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை: முன்னாள் சிபிஐ அதிகாரி
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அறிவு என்கிற ஏ.ஜி.பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பேரறிவாளன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது வி.தியாகராஜன் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி சி.பி.ஐ. கேரள பிரிவின் எஸ்.பி.யாக இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் பொறுப்பு சி.பி.ஐ. அதிகாரி
ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமையை பெற்றுக்கொடுக்க சகல கட்சிகளும் இணைய வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்க தமிழக கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என இந்திய மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
வடக்கில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்கள்! பெண்கள் அச்சத்தில்: அடைக்கலநாதன் எம்.பி
வடக்கில் தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அரச படைகளின் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைககளை உடனடியாக தடுதது நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
ஐ.நாவின் விசேட பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கலாநிதி ஷலோக்கா பேயானி இலங்கைக்கு வருகை
தனது தாயின் சமாதியை பார்க்கப் போனதால்தான் ஜெயபாலன் கைதானார்! நோர்வேயிலிருந்து துணைவியார்
தனது தாயின் சமாதியைப் பார்க்கப் போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார்.
மலேசியாவில் 1000இற்கும் மேற்பட்ட இலங்கையர் கைது
மலேசியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்களுக்கு புதிய நிபந்தனை

தேசிய தகவல் மையத்தின் அதிகாரியும், வெளிநாட்டினர் இந்தியாவில் குடியேறுதலுக்கான விசா வழங்குதல் பதிவு மற்றும் தொடர்ந்து கண்காணிக்கும் துறை அதிகாரி எஸ்.ஏ.விஜயகுமார் கூறினார்.
வேலூர் பரபரப்பு : 300 இஸ்லாமிய இளைஞர்கள் பாஜகவில் இணைந்தார்கள்
இந்துத்துவா கட்சி என வர்ணிக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை முன்னிறுத்தியுள்ளது அக்கட்சி தலைமை. 

சாலைகளில் மனம் நலம் பாதிக்கப்பட்டவர்கள்:உதவிய கவுன்சிலர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் ஆதரவற்ற முதியோர்கள் அநாதைகளாக்கப்பட்டு கிடக்கிறார்கள். கிடைத்த இடத்தில் படுத்து உறங்குவது, மடங்கள், ஆஸ்ரமங்களில்
புலிகளின் அடுத்த தலைமையகம் மொரிசியஸ் நாட்டில் உருவாக்கப்படலாம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைமையகம் மொரிசியஸில் உருவாக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.சர்வதேச புலனாய்வுப் பிரிவை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனிவா மார்ச் மாதக் கூட்டத்தொடர் இலங்கைக்கு கடுமையானதாக அமையும்! கொழும்பு ஆங்கில நாளேடு
ஜெனிவாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள  ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் இலங்கைக்கு கடுமையானதாக அமையும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை ஆட்சியில் முட்டுக்கட்டைகள்! இணைத் தலைமையை ஏற்று செயற்பட முடியாது!- விக்னேஸ்வரன் [ பி.பி.சி ]
இலங்கையின் வடக்கே, இரண்டு மாதங்களுக்கு முன்னர் உருவான வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் உள்நுழைந்த 79 இலங்கையர்கள் திரும்பவும் சிறிலங்காவிற்கு..

கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக உள்நுழைந்த 79 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக வெள்ளியன்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
ஊடக அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் இடம்பெற்றது.
மிரிஹானை தடுப்பு முகாமில் கவிஞர் ஜெயபால/பி பி சி 
இலங்கைக் காவல்துறையினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ள தமிழ்க் கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் தற்போது குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் 50 தமிழ் குடும்ப பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை: மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என

ad

ad