புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2013



இலங்கை ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால், தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமைகள், சித்ரவதைகளை அம்பலப்படுத்தும் அறிக்கை, லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் நிகழ்த்தப்பட்ட சித்ரவதைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை மனித உரிமை கண்காணிப்பு குழு லண்டனில் இன்று வெளியிட்டது.

ராஜபக்சேவை கைது செய்து தூக்கிலிட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!
இலங்கை தமிழர் படுகெலை, பிரபாகரனின் மகன் பாலசந்திரன் படுகொலையை கண்டித்தும் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று கண்டன

இலங்கை அரசை விசாரித்து நீதி வழங்கக்கோரி மாநாடு! டி. ராஜா ஜெனிவா பயணம்!
உலகத் தமிழர் பேரவையின் சார்பில் மார்ச் 2, 3 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்


India take 1-0 lead with easy win
Australia 380 & 241
India 572 & 50/2 (11.3 ov)


இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு! போர் குற்றங்களுக்கு எதிராக தீர்மானம் தாக்கலாகிறது!
ஜெனீவாவில் தொடங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்கிறது.

ஆன்மீக பயணமாக தமிழகத்திலுள்ள புனித வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு சென்ற இலங்கையைச் சேர்ந்த 70 பேரைத் தமிழக பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு செல்வதற்கு நேற்று திருச்சி விமான நிலையத்தினை வந்தடைந்த இலங்கை பக்தர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட அறிவிப்பொன்றை வழங்கவுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான சில புகைப்படங்களை வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு வழங்கியமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் மடிக்கணனிக்கு தனது மடிக்கணனியிலிருந்த பல

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இலங்கைக் குழுவினர் ஜெனீவா சென்றடைந்துள்ளனர். இந்நிலையில்,நாளை விசேட உரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுச் சிறுவர்கள் விவகாரத்தில் அவர்களது பெற்றோர்களை பலவந்தமாக குற்றவாளிகளாக்கி அதன் மூலமான அறிக்கை ஒன்றை ஜெனீவா பேரவையில் சமர்ப்பித்து தமது செயற்பாட்டை சர்வதேசத்தின் முன்னிலையில் நியாயப்படுத்துவதற்கான சூழ்ச்சிகர நடவடிக்கைகளில் நோர்வே அரசாங்கம் இறங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நோர்வே அரசாங்கத்தி;ன் நேரடி கண் காணிப்பின் கீழ் இயங்குகின்ற சிறுவர் நலன் காப்பகங்களால் வெளிநாட்டுப் பெற்றோரிடமிருந்து பலவந்தமாகவும் அதேநேரம் கடத்தல் பாணியிலும் கொண்டுசெல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விடயத்தில் உண்மை நிலைமைகளை ஆய்ந்தறியாத வகையில் தயாரிக்கப்பட்டதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பெற்றோர் நோர்வே சிறுவர் காப்பங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
இட்டுக்கட்டி தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெற்றோர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அந்த ஒப்புதல்களை ஜெனீவா பேரவையில் சமர்ப்பித்து அதனுடாக தமது அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் சதித்திட்டமாக இருப்பதாகச் கூறப்படுகின்றது.
நோர்வே அரசாங்கமானது சிறுவர்கள் விடயத்தில் சர்வதேசத்தின் முன்னிலையில் இழந்துள்ள நன்மதிப்பினை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இவ்வாறான சூழ்ச்சித்திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முயற்சித்திருப்பதாக பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் நோர்வே அரசாங்கம் இவ்வாறு செய்யத்துணிவதன் மூலம் தமது பிள்ளைகளின் வாழ்க்கையும் அவர்களது எதிர்காலமும் கலாசார பண்பு நிலைகளும் சீரழிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் காப்பகங்களிடமிருந்து தமது பிள்ளைனளை மீட்டுக் கொள்ளும் பொருட்டு டொம் தேவாலயத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டதன் விளைவாகவே இவ்விவகாரம் பூதாகாரமாகி உலகெங்கிலும் பரவியுள்ளது என்பதைக் காரணம் காட்டி குறித்த பெற்றோர் மீது அரசியல் ரீதியிலான மறைமுகப்பழிவாங்கல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
சட்டம், நீதித்துறை மற்றும் பொலிஸார் என சகல தரப்பினருமே சிறுவர் காப்பகங்களுக்கு 

சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று ஜெனீவா பேரவையில் சமர்ப்பிக்கும் முயற்சியில் நோர்வே


சாதகமாக செயற்படுவதால் தாமும் தமது குழந்தைகளும் எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகளான அடிப்படை மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை எங்குமே முறையிட

அண்மைக் காலமாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் தமிழீழ ஆதரவு, சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக, தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் குறித்து கவனிக்கப்பட வேண்டுமென பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான்

இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட 7பிரான்ஸ்பிரஜைகள் கழுத்தறுப்புக்கு காத்திருப்பு video
பிரான்ஸ் நாட்டு பிரஜைகள் கமேரூன் என்ற நாட்டில் வைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது அனைவரும் அறிந்தது பிரான்ஸ் மக்களிடையே ஒரு பதட்டத்தையும் உண்டு பண்ணி இருந்தது அந்த வகையில் அவர்களை எங்கு வைத்து இருக்கின்றார்கள் என்று

இலங்கையில் மிக மோசமான யுத்தமீறல்கள் இடம்பெற்றுள்ளன: ஜெனீவாவில் நவி.பிள்ளை
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மிகமோசமான யுத்த மீறல்கள் புரியப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டைப் பற்றியே அறிந்த யாழ். இராணுவத் தளபதிக்கு மக்களின் சந்தோசம் பற்றித் தெரியுமா?- சுரேஸ் பிறேமச்சந்திரன்
வலி. வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்க முடியாதென கூறியிருக்கும் யாழ். இராணுவத் தளபதியின் கருத்து, வடமாகாண சிவில் நிர்வாகத்தில் அதீத இராணுவத் தலையீடு இருப்பதை காட்டுவதாகவும் இதனை த.தே.கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும்

புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு ஐ.நா மனிதஉரிமை கூட்டத் தொடரில் பங்கேற்பு
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரில் பங்கேற்க புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பயணமாகியுள்ளது.

தலித் பெண்ணான வித்யாவின் குடும்பம், ஆதிக்க சாதியினைச் சார்ந்த விஜிய பாஸ்கரின் திருமணத்தினை ஒப்புக்கொண்டது.. ஆனால், விஜிய பாஸ்கரின் குடும்பம் இதற்கு ஒப்புதல் அளிக்காததினால், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ய அவர் வித்யாவை நிற்பந்தித்துள்ளார். இதற்கு மறுத்த வித்யாவின் மீது, அவர் ஆசிட் ஊற்றியுள்ளார்.

இதில் கொடுமையான விடயம் என்னவென்றால், டெல்லி சம்பவத்திற்கும், ஏன் வினோதினிக்கும் கூட குரல் கொடுத்தவர்கள், வித்யா என்னும் தலித் பெண்ணினை ஏறெடுத்தும் இன்னமும் பார்க்கவில்லை.. 

பன்னிரெண்டு வயது பாலகன் துப்பாக்கி தூக்கினால் அது போர்க் குற்றம் !

அப்பா!
எல்லா அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
தாத்தாவும்
பாட்டியும்
இந்நேரம்
முசிறியில்
மூச்சோடு
இருந்திருப்பார்கள்!

ad

ad