புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014

நியூசி.யுடன் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி

நியூசிலாந்துடன் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது.  3வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.

ஊழல்வாதி பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு கட்காரி 3 நாள் கெடு

ஊழல்வாதிகள் பட்டியலில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் பெயரை தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்காரி, கெஜ்ரிவால் மூன்று தினங்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்..
தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!


பஞ்சாப்பைச் சேர்ந்த தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் 31.01.2014 வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேவேந்திர சிங் புல்லரின் மருத்துவ அறிக்கையை ஒரு வாரத்தில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மரண தண்டனையை குறைக்கக் கோரும் மனு பற்றி டெல்லி அரசு, மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்தக் கட்ட விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 
கோழிக்கறி வியாபாரியை வெட்டி கொன்ற கள்ளக்காதலி
சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் (வயது 45) அதே பகுதியில் கோழிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செல்வபாத்யா, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும்
கலைஞருடன் பரூக் அப்துல்லா சந்திப்பு
திமுக தலைவர் கலைஞரை அவரது சிஐடி காலணி இல்லத்தில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்ததால் திமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்! பேரவைத் தலைவர் நடவடிக்கை
 
அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் பகுகுணா!
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை விஜய் பகுகுணா வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விருப்பதை ஏற்று தான் ராஜினாமா செய்தாக அவர் தெரிவித்துள்ளார். 
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரின் பண்ணை தோட்டத்தில் போலீசார் சோதனை!
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபிக்கு சொந்தமான மதுரை அவனியாபுரம் பண்ணை தோட்டத்தில் மதுரை போலீசார்
 கடந்த ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை அமுல்படுத்தவில்லை. இரா. சம்பந்தன்
வடக்கு மாகாணத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியிருந்தாலும் இதுவரை அப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.
அரசு போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன் கேள்வி
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், அரசு போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையாயின் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகப் புற்று நோய் தினம்

இணையத்தளம் அங்குரார்ப்பணம்

உலக புற்று நோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவ்வருடத் திற்கான தொனிப்பொருள், மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்’ என்பதாகும். இதற்கமைவாக இலங்கை மக்களுக்கு புற்றுநோய்

இலங்கையில் வருடந்தோறும் 25,000 பேர் புற்றுநோய்சிகிச்சைகளுக்காக புதிதாக பதிவு

சுகாதார கல்விப் பணியகம் அதிர்ச்சி தகவல்
பெண்களுக்கு மார்பு, கர்ப்பப்பை புற்றுநோய்கள் பாரிய அச்சுறுத்தல்
சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெற்றால் குணப்படுத்தலாம்

பங்களாதேசுடனான முதலாவது டெஸ்ட் போட்டி ; இலங்கையணி இன்னிங்ஸ், 248 ஓட்டங்களால் வெற்றி

பங்களாதே'{டனான முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஓடொங்கோ ஜேஜே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் போது உகண்டா பாதுகாப்பு அமைச்சர் விசேட ஞாபகச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

ஏழாவது ஐபிஎல் ஏலத்துக்கான வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி சார்பில் விளையாடிய, விளையாடி வரும் 46 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சேவாக் மற்றும் யுவராஜ் உள்பட 11 இந்திய வீரர்கள் ரூ.2 கோடிக்கான அடிப்படை விலை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏழா
அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த பனிப்புயல்

தெற்கு அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியது, இதன் காரணமாக இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை தனது சேவைகளை ஆரம்பிக்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
 இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.கிளிநொச்சி வரை தற்பொழுது சேவையில் ஈடுபடும் யாழ்தேவி அடுத்த மாதம்

சூரிச்சில் கிளிநொச்சிப் பெண் கள்ளத் தொடர்பு - அந்தரங்க உறுப்புக்குள் அசிற் ஊற்றிய கணவன் கைது

சுவிஸ்'லாந்தின் சூரிச் பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி வருகின்றார். அவரது கணவர் வேலைக்குச் செல்லும் சமயத்தில் குறித்த பெண்ணிண் ஆண் நண்பர் வந்து கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.

தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான அணி உருவெடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
தில்லியில் அவர் ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை பகலில் சந்தித்துப் பேசினார். மதிமுக சட்டப்பிரிவு செயலர் வி. தேவதாஸ், அ. செந்தூர் பாண்டியன்
திமுகவில் நடப்பது நாடகமா? உண்மையா? :கலைஞர் பேட்டி
மு.க.அழகிரி இன்று மதுரையில் அளித்த பேட்டியில்,  ‘’கலைக்கப்பட்ட மதுரை மாநகர் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்; அவர்களை சஸ்பெண்ட்

திராணியிருந்தால், தைரியமிருந்தால் ஜெயலலிதா பதில் சொல்லட்டும் :
ஸ்டாலின் ஆவேசம்
திமுகவின் 10வது மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் இன்று சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்றது.  லட்சக்கணக்கானோர் திரண்ட இப்பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றும்போது,  ‘’திருச்சியில் நடைபெறும்
அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு ( படங்கள்)
தி.மு.க தலைவர் கலைஞரை மிரட்டியதாக, கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அழகிரிக்கு எதிராக தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி
ஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது புகார்
திருமணமான ஒரு குழந்தைக்கு தந்தையான ஆண் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
"3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது சரியானதுதான். எனினும் அவர்களை எவ்வளவு காலம் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ற கேள்வி எழுகிறது" என்று நீதிபதிகள் கருத்து  - உச்ச நீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

30 ஜன., 2014



ஆடை வடிவமைத்து சாதித்த ஒற்றை கை மாணவி
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற  9வது கவின்கலை நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் பரத நடனத்தில் நுண்ணுரியியல்
ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கினால் சமரசத்துக்கு உடன்படுவேன்: மு.க.அழகிரி பேட்டி
மதுரையில் மு.க.அழகிரி தனது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
ராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோக வியாழக்கிழமை டெல்லியில் சந்தித்தார்.
பாராசூட் விரியாததால் பைலட் பயிற்சி மாணவி சேலம் ஏர்போர்ட்டில் விழுந்து உயிரிழப்பு
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரம்யா (26). இவரது கணவர் வினோத் (28). இவர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர், இந்தியா ஸ்கைடைலிங் பாராசூட் அசோசேஷியன் என்ற அமைப்பின்
மு.க.அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று தனது 63வது பிறந்தந்த நாளை கொண்டாடினார்.  நடிகர் ரஜினிகாந்த், அழகிரியை தொடர்பு கொண்டு, வாழ்த்துகூறினார்.
நடிகைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: ஆளும் கட்சி தீர்மானம் - ஐ.தே.கட்சியில் மற்றுமாரு ஆளும் கட்சி உறுப்பினர் இணைவு
மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை கோரி விண்ணப்பித்த தொலைக்காட்சி நடிகைகள் எவருக்கும் வேட்புமனுக்களை வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக நம்பதகுந்த தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
பேரறிவாளன், முருகன், சாந்தன் மரணதண்டனையை ரத்து செய்க!- உச்சநீதிமன்றில் ராம் ஜெத்மலானி வாதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரித் தொடுத்து இருந்த ரிட் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம்,

ஜயவர்தனவின் இரட்டைச் சதத்தால் தோல்வி நெருக்கடியில் பங்களாதேஷ்

இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்றாவது நாள் முடிவின்போதே பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மஹேல ஜயவர்தனவின் இரட்டைச் சதத்துடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
மிர்பு+ரில் நடைபெற்றுவரும் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 375

82 நாடுகளின் தூதுவர்களுக்கு டில்லியில் இலங்கை விளக்கம்

தற்போதைய நிலைமை, LLRC பரிந்துரை அமுலாக்கம், மனித உரிமை முன்னெடுப்புகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜP.எல், நிமல் சிறிபால டி சில்வா விரிவாக எடுத்துரைப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், 82

வடமாகாண சபை தீர்மானத்திற்கு சர்வமதத் தலைவர்கள் கண்டனம்

ஜெனீவா மாநாட்டையிட்டு புலம்பெயர்ந்தோர் பின்னணியில் தீர்மானம் நிறைவேற்றம்
நாட்டைக் காக்க சகலரும் ஒன்றுபட வேண்டும்
இலங்கை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென வட மாகாண சபையில் தீர்மானம்
16,000 டொலர்கள்16,440 யூரோக்கள்

கைப்பையினுள் மறைத்து வெளிநாட்டு நாணயத்தாள் கடத்தும் முயற்சி முறியடிப்புவிமான நிலையத்தில் பெண் கைது

தனது கைப்பையில் மறைத்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திய இலங்கை பெண் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்று இரு யானைக்குட்டிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்டன. ‘கண்டுல’, ‘அபீத’ என்ற பெயர்களையுடைய இந்த யானைக்குட்டிகளை கையளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடந்தபோது எடுக்கப்பட்ட படம். அருகில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி லெப். ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

தமிழர் பேரவையினர் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு


லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவையினர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட்டைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நில அபகரிப்பு மாநாட்டில் பங்கேற்க த.தே.கூ,மற்றும் த.தே.ம.மு குழு லண்டன் விஜயம் கூட்டமைப்பினரின் கருத்துக்கள்.
பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடில் நில அபகரிப்புக்கெதிரான மாபெரும் மாநாட்டில் கலந்து கொள்ள தாயகத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளனர்

    இன்று மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு

    அழகிரியா? ஸ்டாலினா?இன்று பலப்பரீட்சை

மு.க.அழகிரி தனது பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை (ஜன.30) மதுரையில் அதிக அளவில் தனது ஆதரவாளர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளார்.

அழகிரி அண்ணனுக்கு உறுதுணையாக நிற்பேன்: நடிகர் ரித்தீஷ்
 
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார் நடிகரும், ராமநாதபுரம் எம்.பியுமான ரித்தீஷ்.    

அழகிரியுடன் மூன்று திமுக எம்.பிக்கள் தீவிர ஆலோசனை


மு.க.அழகிரியின் 63வது பிறந்த நாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  பிறந்தநாளையொட்டி இன்று மாலையே அவரது இல்லம் பரபரப்பாகியது.   வண்ண விளக்குகளால்
அண்ணன் அழகிரியின் பின்னால் துணை நிற்பேன்; ஒருநாளும் பின்வாங்க மாட்டேன்: நடிகர் நெப்போலியன்முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான நடிகர் நெப்போலியன், இன்று இரவு விமானம் மூலம் மதுரை சென்றார்.   அவர், மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்று,  அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பயங்கர போதையில் சீரழியும் பருவப் பெண்கள்!


மிகவும் அதிர்சிகரமான தகவல், நாகரீகம் என்ற பெயரில் நகரங்கள் நரகங்களாகிக் கொண்டிருக்கின்றன
.இது போன்ற கல்லாச்சார சீரழிவுகளை கண்டு வேதனைப்படுகின்றோம்..தமிழன்

29 ஜன., 2014

லேட்டஸ்ட் நியூஸ்
மு க அழகிரிக்கு 3 எம் பி க்கள் நேரடியாக வாழ்த்து 
நெப்போலியன் ,சித்தீக்,கே,பீ,ராமலிங்கம் ஆஅகிய எம் பி க்கள் நேரடியாக வாழ்த்து  சொன்னார்கள்.அழகிரியின் சொல்லுக்கு கட்டுப் படுவேன் என நெப்போலியன் கூறினார் 
Bangladesh 232 & 35/1 (9.0 ov)
Sri Lanka 730/6d
Bangladesh trail by 463 runs with 9 wickets remaining
Stumps - Day 3
Australia won by 13 runs
சதுரங்கப் போட்டி யாழ் வலயத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைப்பு
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க போட்டியை  நடைமுறைப்படுத்தும் நோக்கில்  இன்று யாழ் வலயத்தில்  உத்தியோக பூர்வமாக சதுரங்கப் போட்டி நிகழ்வு ஆரம்பித்து
தெல்லிப்பளை கிறாஸ் கொப்பர்ஸை வென்றது யாழ்ப்பாணம் சென்ரல்
யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன்  யாழ்ப்பாணம் நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம், யாழ். மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடத்தி வரும் லீக் முறையிலான 20/20

சுவிஸின் டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஜர் பெடரர் ஸ்டிபன், எட்பேர்கை தன் பயிற்சியாளராய் தேர்ந்துதெடுத்துள்ளார்.
2014ம் ஆண்டில் வரவிருக்கும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் கடந்த 1980ம் ஆண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் என்ற பெயர் பெற்ற சுவிடன் நாட்டை சேர்ந்த ஸ்டிபன் எட்பர்கை முக்கிய கோச்சாக தன் பயிற்ச்சிகுழுவில் நியமித்துள்ளார்.
கால்பந்தாட்ட வீரரின் விருதை கெடுத்த ‘முத்தம்’

2013ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதினை எகிப்திய வீரர் முகமது சாலாவுக்கு சுவிஸ் சூப்பர் அணி வழங்கி கௌரவித்துள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டில் 2013ம் ஆண்டிற்கான விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
 ரொறன்ரோவில்; அதிகரித்த குளிர் நிலவும் எனக் காலநிலை அவதானநிலையம் மக்களுக்கு அறியத் தந்துள்ளது.
பனியும் அதிகரித்த குளிர் நிலையும் இணைந்துள்ள இக்கட்டான தருணத்தில் கடந்த கிழமை 1,600ற்கு மேற்பட்ட வாகனவிபத்துக்களி; ஏற்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. அதிகரித்த குளிர் நிலவுவதற்கான காரணம் குளிர்ந்த காற்று வீசுகின்றது
உலகின் தலைசிறந்த ஹோட்டலாக சுவிஸின் Grand Hotel Kronenhof என்ற நட்சத்திர ஹோட்டல் தெரிவாகியுள்ளது.
சுவிசின் பான்டிரிசீனா(Pontresina) பகுதியின், எங்கடைன்(Engadine) நீண்ட பள்ளதாக்கில் Grand Hotel Kronenhof நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது.
குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்

ஸ்பெயின் நாட்டில் 10 மாத குழந்தை தன் தாயால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸை சேர்ந்தவர் கத்ரினா காடிட் ஸ்டஹேலி(40). இவர் மன வளர்ச்சி குன்றிய தன் 10 மாத குழந்தையை சுவிஸ் மருத்துவமனை


சுவிட்சர்லாந்தில் வலைஸ் மாநில (VALIAS)  சியோன்  மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சந்தேகமான பின்னணியில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்திலுள்ள VALIAS மருத்துவமனை அரிய மருத்துவ மனைகளில் ஒன்றானது. இங்கு கல்லீரல் பெருங்குடல், கணையம், உணவுக் குழாய், மற்றும் உள்ளுறுப்பு சிறப்பு அறுவைச் சிகிச்சைக்கு பெயர்போன மருத்துவமனையாகும்.
வாலிபரை விழுங்கிய ராட்சத அலை -வீடியோ 

ஸ்பெயினில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நபரை ராட்சத அலை ஒன்று அடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு ஸ்பெயினில் உள்ள துறைமுகம் ஒன்றில் அப்து என்ற நபர், மீன்பிடிக்கும் கப்பலை புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார்.
மன்னாரில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் 17 வது தடவையாக இன்று புதன்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது. இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜெயந்தன் தர்மலிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்த பிரான்ஸ் நடவடிக்கை
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! மன்னிப்புச் சபை
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஏற்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.போர்க்குற்ற விசாரணை அவசியம் என வட மாகாண சபையில் 27ம் திகதி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை சர்வதேச
அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மகனும், சினிமா தயாரிப்பாளருமான துரை தயாநிதி இன்றே துவங்கிவிட்டார்.
திமுகவிலிருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது தந்தைக்கு ஆதரவா
உள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆதாரம் இருக்கிறது என்று நான் கூறவில்லை?: அழகிரி அதிர்ச்சி பதில்
உள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக என்னிடம் உள்ள ஆதாரங்களை 31ம் தேதி வெளியிடுவேன் என்று நான் கூறவில்லை! என்று ஆச்சரியம் கலந்த பதிலைக் கூறி, செய்தியாளர்களுக்கு அதிர்ச்சியூட்டினார்
தி.மு.க.வில் இருந்து அழகிரி நிரந்தர  நீக்கம்?: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தலைமை முடிவு
திமுகவின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த வாரம் தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகிரி, தி.மு.க.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி!- பந்துல குணவர்தன
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் திட்டமிட்ட முயற்சியின் முதல்படியாகவே மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான யோசனை
முருகன், சாந்தன், பேரறிவாளன் மனு மீது நாளை விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் சார்பில் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச
ஸ்டாலினுடன் சமரச பேச்சுவார்த்தையா? : அழகிரி ஆவேசம்
 


மு.க.அழகிரி திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் கலைஞர் அளித்த விளக்கத்தை அழகிரி மறுத்தார்.  ஆனாலும் திமுகவினர் ஆத்திரம் கொண்டு அழகிரியின் உருவ பொம்மையை தமிழகம் முழுவதும் எரித்து வருகின்றனர்.  
அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
 சட்ட சபை கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம்  திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 
சிறிலங்காவுக்கு எதிராக நிஷா பிஸ்வாலை களமிறக்குகிறது அமெரிக்கா – கொழும்பு, லண்டன், ஜெனிவாவுக்கு விரைகிறார்

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரத் தயாராகியுள்ள அமெரிக்கா, இது தொடர்பான ஏற்பாடுகள், ஒழுங்குகளைக் கவனிக்க, இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரியை சிறிலங்கா, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பவுள்ளது.
தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், முதற்கட்டமாக நாளை மறுநாள்

விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிரட்டும் வகையில், விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா
11ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது! மாணவி மீட்பு!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாணவி பெயர் பிரபா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆணையம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்
கூட்டணி பற்றி மாநாட்டில் அறிவிக்கப்படும்: 2016ல் சென்னை கோட்டையில் தேமுதிக ஆட்சி: பிரேமலதா பேட்டி
உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சியில் வருகிற 2ம் தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிட விஜயகாந்த் மனைவி பிரேமலதா புதன்கிழமை எறஞ்சி வந்தார்.
மாநாட்டு பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,
எறஞ்சியில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படியாக மனு
ஏடிஎம் மையத்தில் கிடந்த ரொக்கத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த அலுவலர்
புதுக்கோட்டை நிஜாம் காலனியைச் சேர்ந்தவர் சி. தண்டபாணி. ஓய்வு பெற்ற அரசு அலுவலரான இவர், புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குப்
அண்ணன் அழகிரி உருவ பொம்மையை எரிக்கக் கூடாது! மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் மற்றும் ஏராளமான முன்னோடிகளும் எண்ணற்ற தியாகங்களைச் செய்து வளர்த்த கழகத்தில் ஒரு சில நாட்களாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைக்காக நான்
நான் தி.மு.க.வில் இல்லை என்றார் நடிகர் டி.ராஜேந்தர்.
தி.மு.க.தலைவர் கருணாநிதியை தான் சந்தித்தது ஒரு அரங்கேற்றப்பட்ட காட்சி என்றும் அவர் தெரிவித்தார்.தன் மகள் இலக்கியாவின் திருமண அறிவிப்பை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அப்போது அவர்

    மாநிலங்களவைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் 6 பேர்

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அணியைச் சேர்ந்த 5 வேட்பாளர்களும், திமுகவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ

    காங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜிவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தூக்குத்தண்டனை ரத்தாக வாய்ப்பு
முன்னாள் பாரதப் பிரதமரான ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்! இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பம்
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக
போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்தால் இலங்கைக்கு உதவ தயார்!- பிரித்தானியா
தம்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தால் அதற்கு தாம் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது!
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளது.
ஆனந்தி சசிதரனின் யோசனை நிராகரிப்பு! - புலிகளின் நினைவுத் தூபி குறித்த யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனின் யோசனைத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென
அனந்தி எழிலன் - ஒரு பரிசோதனை எலி,
வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன.
மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா ராஜினாமா
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட குமாரி செல்ஜா  தனது பதவியை ராஜினாமா செய்தார்.



யாழ்ப்பான பல்கலை கழகத்தின் புதிய துணை வேந்தருக்காகான தேர்தல் நடை பெற இருக்கின்றது . தற்போது துணை வேந்தராக உள்ள பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்க முடிவெடுத்துள்ளார் . மீண்டும் பல்கலைகழகத்தில் இவருடைய தலைமையை கணிசமானளவு விரிவுரையாளர்களும் மாணவர்களும் கல்விசார்ந்த, கல்விசாரா ஊழியர்களும் விரும்ப வில்லை .


சுவிஸின் பிலாடுஸ் ஸ் நிறுவனம் பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த 1939ம் ஆண்டு முதல் சுவிசின் செங்காலன்  நகரில் விமானங்களை தயாரித்து வரும் பிலெடஸ் நிறுவனத்தில் 1600 பணியாளர்களும், 100 பயிற்சியாளர்களும் பணியாற்றுகின்றனர்.

ஆபாசப்படம் பார்த்துடன் சிறுமிகளை பலாத்காரப்படுத்தும் கடாபி அதிர்ச்சிக் காட்சிகள் அம்பலம்

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான கடாபி சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அவர்களை தனது பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார் என்று பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. -4 தொலைக்காட்சி புதிய ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது.

28 ஜன., 2014

இழுவைப் படகை பயன்படுத்துவது தவறு; ஒப்புக்கொண்டது - தமிழக குழு
எதுவானாலும் எல்லை மீறினால் கைது செய்வோம் - இலங்கை மீனவர் குழு

மீனவர் குழுக்களின் பேச்சு சுமுகம்: இருநாட்டு அரசுகளே இறுதி முடிவு

* அடுத்த சுற்று பேச்சு இலங்கையில்
* 14 நாள் கால அவகாசம் கோரியது தமிழகக்குழு
இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே நேற்று சென்னையில் நடைபெற்ற முதற்சுற்று பேச்சுவார்த்தை சற்று காரசாரமாக ஆரம்பித்து மாலையில் சுமுகமாக நிறைவடைந்தது.
பேச்சுவார்த்தையின் இறுதியில் இருதரப்பும் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டதுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்தனர்.

வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூபி தீவு

பசிபிக் கடலில் புதிதாக உருவான தீவு ஒன்று வேகமாக விரிவடைந்து வருவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு டோக்கியோ பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சக்தி மிகுந்த கடற்கீழ் அரிப்பு ஏற்பட்டு வெடிக்கத் தொடங்கியது. அப்போது உருவான புதிய தீவுவொன்று வேகமாக விரிவடைந்து வருவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாப்பரசர் பறக்கவிட்ட புறாக்கள் மீது ஏனைய பறவைகள் தாக்குதல்

உலக அமைதியை வேண்டி பாப்பரசர் பிரான்சிஸ் வத்திக்கான் நகரில் சிறுவர்களுடன் சேர்ந்து பறக்கவிட்ட இரு வெள்ளை புறாக்களை ஏனைய பறவைகள் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாப்பரசரின் வாராந்த பிரார்த்தனையின் போதே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த புறாக்கள்
பங்களாதே'_டனான முதல் டெஸ்ட்:

இலங்கை அணி ஸ்திரமான நிலையில்

பங்களாதே'{டனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி ஸ்திரமான நிலையில் உள்ளது.
பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டு

கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்கமைய கொழும்பு கொம்பனித்தெருவில் வசிப்பவர்களுக்கு புதி தொடர்மாடி வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது கொம்பனித்தெரு டி சொய்ஸா வீதியிலுள்ள பழைய மாடி வீட்டுத் தொகுதி அகற்றப்படுவதை படத்தில் காணலாம். 


பேஸ்புக் காதலால் ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண்தினமும் மதுபான விருந்து, ஆடம்பர வாழ்க்கை
அளவுக்கு மீறிய செலவு என சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த

ad

ad