புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2022

ஸ்கொட்லாந்தை தோற்கடித்து அடுத்த சுற்றிற்கு முன்னேறியது சிம்பாப்வே

www.pungudutivuswiss.com
ஸ்கொட்லாந்தை ஐந்து விக்கெட்களால் தோற்கடித்து சிம்பாப்வே அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளதுஸ்கொட்லாந்துக்கு எதிராக ஹோர்பார்ட் பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கடைசி முதல் சுற்று ஆட்டத்தில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய சிம்பாப்வே, 4 ஆவது அணியாக சுப்பர் 12 சுற்றில் நுழைந்தது.

சிம்பாப்வே அணி இருபதுக்கு 20 உலககிண்ண வரலாற்றில் இரண்டாவது சுற்றில் முதல்தடவையாக நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாப்வே அடுத்த சுற்றில் இந்தியா பாக்கிஸ்தான் தென்னாபிரிக்கா பங்களாதேஸ் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கின்றது.

ஏ குழுவிலிருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகியனவும் பி குழுவிலிருந்;து அயர்லாந்தும் ஏற்கனவே சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன.

நிறைவேறியது 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம்.மஹிந்த உட்பட 44 பேர் கலந்துகொள்ளவில்லை.எதிராகசரத் வீரசேகர மாத்திரம்

www.pungudutivuswiss.com
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 178  மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

ad

ad