புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013


கனடாவின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றான தமிழர் செந்தாமரை குழுமம் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வாரி வழங்கக் கூடிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சானல் ஒன்றினை புதிதாக துவங்கியுள்ளார்கள். 
 
 TET ( Tamil Entertrainmaent Television ) என பெயரிடப்பட்டுள்ள இந்த சானலுக்கென  மிக விசாலமான இட வசதியுடன் கூடிய பிரமாண்டமான தொலைகாட்சி அலுவலகமும் ஸ்காபுறோவில் உருவாக்கப்பட்டுள்ளது. 


மதிப்பெண் மேல் எடுத்தால் வருடம் ரூ. 3,000 உதவித்தொகை
சென்னை: தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உதவித்தொகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், முதல், 500 மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, வருடம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1168 பெற்ற மாணவியர், மதிப்பெண், சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரியில் படிக்கும் சான்றிதழ்களுடன், அவர்கள் பிளஸ் 2 படித்த மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.


தமிழரசுக் கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்தும் பங்கேற்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்து , உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
. செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள 10 பேர், தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றக்கோரி, கடந்த சில தினங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

வடக்கில் தமிழ் மொழிமூல இராணுவ ஆசிரியர்களை நியமிக்க முடியுமென்றால் ஏன் தெற்கில் இராணுவ ஆசிரியர்களை நியமிக்க முடியாதென கேள்ளவியெழுப்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வடக்கிற்கு ஒரு சட்டமும் தெற்கிற்கு வோறொரு சட்டமா எனவும் கேள்வியெழுப்பினார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல்போன ஒருவராகவே அரசாங்கம் கருதுகிறது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல்போன ஒருவராகவே அரசாங்கம் கருதுகிறது என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர்

இலங்கையில் தொடரும் அச்சுறுத்தல்கள்! பிரித்தானியப் பாராளுமன்றில் நடைபெற்ற சூடான விவாதம்
இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும் தொடரும் மனிதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றை மையமாக வைத்து பிரித்தானியப் பாராளுமன்றில் சூடான விவாதம் ஒன்று நடைபெற்றது.

கேரளா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது
தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கி இருந்த இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பி செல்ல முயன்றபோது தமிழக கியூ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீட்டை கண்ணால் கண்டேன்! பிரான்ஸ் தூதுவர் வாக்குமூலம்
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை எனது கண்களாலேயே நான் நேரடியாகக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசன் யாழ்.மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சிப் பகுதியில் இருந்து நேற்று கடல்தொழிலுக்குச் சென்ற ஆறு படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.இதில் மயிலிட்டித்துறையில் இருந்து 4 படகுகளும், பொலிகண்டித் துறையில் இருந்து சென்ற இரண்டு படகுகளுமே இவ்வாறு கரை திரும்பவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.பிந்திக் கிடைத்த தகவலின்படி குறித்த ஆறுபடகுகளில் 12 மீனவர்கள் உள்ளதாகவும், தற்போது இரண்டு படகுகள் கரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரிசானாவிற்கு மரண தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது! இல.பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
இலங்கைப் பணிப் பெண் ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  இச்செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.

புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்கிறதாம் ஜி.எல்.பீரிஸ் கவலைதெரிவிப்பு:


நந்திக்கடலில் போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்க முனைவதாக, முறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா அரசு மீது

தாழமுக்கம் வலுவிழந்தது: காற்றுடன் மழை தொடரும்

60 கி.மீ. வேகத்தில் காற்று, கடல் கொந்தளிப்பாக இருக்கும்; மட்டு உறுகாமத்தில் கூடுதல் மழை
இலங்கைக்கு அருகே 500 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு தென்கிழக்குப் பகுதியாக நகர்ந்து வங்காள விரிகுடாவில் செயலிழந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வட மாகாணப் பாடசாலைகள் மோதும் கரப்பந்தாட்டத் தொடர்

வட மாகாண கல்வித் திணைக் களத்தினால் வட மாகாணப் பாடசாலை களுக்கு இடையேயான 16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிக்கான விண்ணப்பங்களை வட மாகாண கல்வித் திணைக்களத்தின்

ஐ. சி. சி. தர வரிசை

துடுப்பாட்டத்தில் அம்லா; பந்து வீச்சில் அஜ்மல் முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இரு இடங்களையும் தென்னாபிரிக்க வீரர்கள் உள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு:-

விநெகும தமிழ் மக்கள் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தும்

தமிழ் மக்களின் வாழ்வை தடுக்க முயல்கிறது தமிழ் கூட்டமைப்பு
வாழ்வின் எழுச்சித் திட்டம் தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். ஆனால் எமது மக்களின் வாழ்வில் எழுச்சி ஏற் படுவதை தடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது என ஈ. பி. டி. பி. தலைவர் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


இராணுவத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் ஒருவார கால சுற்றுலா பயணமாக கொழும்பு வருகை தந்துள்ளனர். கொழும்பிலுள்ள இராணுவ மகளிர் படைப்பிரிவுக்கு சென்ற அவர்களை, இராணுவ தளபதியின் பாரியாரும் சேவா வனிதாவின் தலைவியு மான மஞ்சுளிகா ஜயசூரிய வரவேற்று உரையாடுகிறார். (ஷி)

'திவிநெகும' சபையில் நிறைவேற்றம்

  • 2/3 பெரும்பான்மை வாக்குகள்
  • ஆதரவு 160, எதிர் 53
மாகாண சபைகளுக்கும் அப்பால் சென்று மக்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம் - அமைச்சர் பசில்
‘திவிநெகும’ வாழ்வெழுச்சி சட்டமூலம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்

விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம்  கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல், நேற்று பரிதாபமாக மரணமடைந்த, 
பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி என்ற 68 வயது மலையக வயோதிப தமிழ் பெண்ணின் பரிதாப மரணம், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும், பொறுப்பின்மைக்கும்  அடையாளமாக அமைந்துவிட்டது. 
 இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்துகொண்டு, அரசாங்க பதவி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை வேறு தவிர என்னத்தான் செய்கிறார்கள் என, இவர்களை காணும் இடமெல்லாம்  தமிழ் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும்


வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாரின் உடல்நிலைக்கு மருத்துவம் பார்ப்பதற்காக தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக 18 வயது பள்ளி மாணவி ஒருவர் இணையத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அந்த பகுதியையே அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது.
18-year-old Rebecca Bernardo, a high school student from Brazil

28,000 கோடியா? என வாயைப் பிளந்த மீடியாக்கள் அது ஸ்பெக்ட்ரம் பணம் என எந்தவித அரசியல் தொடர்புமில்லாத ராம      லிங்கத்தை வைத்து கதகளி ஆடின.
டந்த டிசம்பர் 31-ந்தேதி இரவு. இந்திய வருமானவரித் துறையினர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறையில் உள்ள ஒருவரின் வீட்டுக்குள் புகுந்தபோது இந்தியா வே அதிர்ந்து போனது. அந்த வீட்டுக்காரரின் உரிமையாளர் பெயர் ராமலிங்கம்.
""ஹலோ தலைவரே... தி.மு.க.வில் எதிர் காலத்தில் பிரச்சினையாக மாறும்னு நினைச்ச சர்ச்சைக்கு ஜனவரி 6-ந் தேதி  கலைஞர் முற்றுப்புள்ளி வச்சிட்டாரே!''

""தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழி வேன்னு கலைஞர் பேட்டி கொடுத்ததைத்தானே சொல்றே.. முன்மொழிந்ததன் பின்னணியில் உள்ள தகவல்களைச் சொல்லுப்பா?''




               பாச சாமியார் நித்திக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறது "ஜெ.'’போலீஸ்.

மதுரை இளைய ஆதீனப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்த நித்தி, இழந்த தன் இமேஜை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தனது பிறந்தநாளை திருவண்ணா மலை ஆசிரமத்தில்(?) கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுத்தார். கூலிக்கு ஆள் பிடித்தாவது  கூட்டத்தைக் காட்டவேண்டும் என்பது அவரது திட்டம்
 நீலகிரி குன்னூலிருந்து 36 கிலோ மீட்டர் மலைத்தொலைவின் மேல் இருக்கிறது குந்தா தாலுக்காவிலிருக்கும் எடக்காடு. 11 மணிக்குள் நடையாய் நடந்து எல்லோரும் வந்து சேர்ந் திருக்க முதலமைச்சர் ஜெ. மதியம் 1.20 மணியளவில்தான் மேடைக்கு வருவார் என்பதால் எடக்காடு பெண்களைச் சந்தித் தோம். 

இங்குதான் தமிழக முதல்வர் ஜெ., கடந்த 4-01-13ந் தேதி உடலை வருடும் இதமான தென்றலுக்கும், வானத்தைத் தொடும் அளவு வளர்ந்திருக்கும் மரங்களுக்கும்,  காற்றோடு கலந்து வீசும் ரம்யமான யூகலிப்டஸின் நறுமணத்திற்கு மிடையே குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் 50-வது ஆண்டு விழாவில்... அத்தொழிற்சாலையின் கண்காட்சி யைத் திறந்து வைத்து பின் பொன்விழாவில் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பில் நீலகிரியே சின்னாபின்னமாக்கப்பட்டது.

ம.தி.மு.க.,வில் கொள்கை பரப்புச் செயலராக, பதவி வகித்தவர், நாஞ்சில் சம்பத். கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். கொள்கை பரப்பு துணைச் செயலராக, நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2003ம் ஆண்டு, நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்டிருந்த, மூன்று அவதூறு வழக்குகளை, வாபஸ் பெற, சென்னை, செஷன்ஸ் கோர்ட்டுகளில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், சென்னை, வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக தொடரப்பட்டிருந்த, அவதூறு வழக்கை வாபஸ் பெற, அனுமதி கோரி, தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு பொறுப்பான, நீதிபதி மீனா சதீஷ் முன், விசாரணைக்கு வந்தது. வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், விடுதலை செய்வதாக, நீதிபதி மீனா சதீஷ் உத்தரவிட்டார்.

நம்மூரில் இதெல்லாம் சகஜமப்பா!
நீதியமைச்சர் நீதி கேட்டுப் போராட்டம்.
தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை.
சனாதிபதியின் மகன் அதிக புள்ளி எடுத்து,சட்டக்கல்லூரியில் தேர்வு. 
சட்டக் கல்லுரி நுழைவில் இஸ்லாமிய மாணவர்களின் தீடீர் அதிகரிப்பு.
சட்ட நுணுக்கங்களின் ஆய்வு அற்று பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கு புனர்வாழ்வு.
இதைவிட சட்டக்கல்லூரி வாசலே தெரியாத,அமைச்சர்  தேவானந்த  சொல்கிறார்:
"அரசியல் உரிமை முதற் கொண்டு,கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடிப் பெற்றுத் தரத்தயாராக இருக்கிறேன்."
நம்மூரில் இதெல்லாம் சகஜமப்பா!
நீதியமைச்சர் நீதி கேட்டுப் போராட்டம்.
தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை.
சனாதிபதியின் மகன் அதிக புள்ளி எடுத்து,சட்டக்கல்லூரியில் தேர்வு. 
சட்டக் கல்லுரி நுழைவில் இஸ்லாமிய மாணவர்களின் தீடீர் அதிகரிப்பு.
சட்ட நுணுக்கங்களின் ஆய்வு அற்று பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கு புனர்வாழ்வு.
இதைவிட சட்டக்கல்லூரி வாசலே தெரியாத,அமைச்சர் தேவானந்த சொல்கிறார்:
"அரசியல் உரிமை முதற் கொண்டு,கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடிப் பெற்றுத் தரத்தயாராக இருக்கிறேன்."
கூகுள் தளத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை எம் செம்மொழியான தமிழ் மொழி , தமிழ் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!...

நாம் கண்டிப்பா பார்த்து பகிர்ந்து கொள்ள வேண்டிய காணொளி .


எமது மண்ணின் கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவியை இனியாக இசை கோர்த்து பாடலாக்கி தருகிறார்  புங்கை பெற்ற மங்கை ப.ரோஹிணி 
பாராட்டுக்கள் .இங்கே அழுத்தவும் 
http://www.facebook.com/photo.php?v=10152404101645720&set=p.10152404101645720&type=2&theater

ad

ad