புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2012


கிழக்கு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் திட்டமிட்டு குறைக்கப்பட்டதாக கசிந்துள்ள தகவல்!
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பே 15 ஆசனத்தை பெற்று அதிகப்படியாக திகழ இருந்தது. இதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஜனாதிபதியின் அறிவித்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைக்கப்பட்டது.

கிராமம் முன்னேற சன சமூக நிலையங்கள் தேவை: புங்குடுதீவில் துரை கணேசலிங்கம் தெரிவிப்பு
 புங்குடுதீவு அனைத்துலக ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் செயலாளர் நாயகமுமான துரை கணேசலிங்கம் அவர்கள் புங்குடுதீவு ஐங்கரன் சனசமூக நிலையத்தை திறந்து வைத்தார்.

கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை தருக!-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை இரண்டு கட்சிகளும் நேற்று மாலை கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தமது தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளன.

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்படும்: மாவை சேனாதிராசா
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது.

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்படும்: மாவை சேனாதிராசா
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு வேண்டுகோள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெறுமாறும் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


போலீஸ் துப்பாக்கிச் சூடு! திருச்செந்தூர் அருகே மீனவர் உயிரிழப்பு!

கிழக்கில் முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர
கிழக்கு மாகாண தேர்தலில் பாரிய வெற்றியை எதிர்பார்த்த முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியையே அடைந்துள்ளதுடன் எமது கோரிக்கையை ஏற்று முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர் என்பதை உலகுக்கு
மு. கா.முதலமைச்சருடன் கூட்டமைப்பு-முகா-ஐதேக ஆட்சி அமைய வேண்டும் : மனோ கணேசன்
கிழக்கு மாகாணத்தில் எதிரணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆட்சியை வீழ்த்தும் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்குப் பெருந்தன்மையுடன் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். இது கடந்த கால வரலாற்றுத்
வெற்றிபெற்றமாவட்டஉறுப்பினர்களைக்கலந்துரையாட கொழும்பு வருமாறு அழைப்பு
கிழக்கு மாகாண சபை ஆட்சியை அமைப்பது தொடர்பில் அரசாங்கமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆராய்ந்து வரும் நிலையில், கட்சியின் வெற்றிபெற்ற அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களை

மாகாணசபைத் தேர்தல்: மட். மாவட்டத்தில் மு.பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் தோல்வி
மட். மாவட்டத்தில் மாகாணசபைக்குத் தெரிவான 8 உறுப்பினர்கள் மற்றும் இரண்டு முன்னாள் பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.
நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் கடந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து
தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று வீழந்து ஆறு இராணுவ வீரர்கள் பலி

தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று இடிந்து வீழந்ததில் ஆறு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
என்னை வீழ்த்த நினைத்த த.தே.கூ. க்கு மக்கள் தகுந்த பாடம்: சந்திரகாந்தன
பிள்ளையானை வீழ்த்த நினைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மட்டக்களப்பு மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

ஈராக்: பிரான்சு தூதரகம் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்
ஈராக் நாட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மற்றும் சில தீவிரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்! சிரேஷ்ட உறுப்பினர்களுடன் பேசி முடி
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

யாழில் சினிமா பாணியில் இரு குழுக்களுக்கிடையே வாள் வெட்டு: ஒருவர் பலி! இருவர் படுகாயம்
யாழ். திருநெல்வேலி சிவன் - அம்மன் ஆலயத்தை அண்டிய மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இரு இளைஞர் குழுக்கள் பரஸ்பரம் வாளால் வெட்டிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பெண்ணொருவருடன் சேஷ்டையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு தருமஅடி: யாழில் சம்பவம்
பெண்ணொருவருடன் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்ற பொலிஸார் ஒருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கில் தலையாட்டி பொம்மையாக மாறுவதா? கூட்டமைப்புடன் இணைவதா? முஸ்லீம் காங்கிரஸ் நாளை முடிவு!
கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஐ. ம.சு. கூட்டமைப்புக்கு கொடுத்துவிட்டு, தலையாட்டி பொம்மையாக முஸ்லீம் காங்கிரஸ் இருக்கப் போகின்றதா? அல்லது காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபையை அமைப்பதற்கான உரிமையை த. தே. கூட்டமைப்புடன் இணைந்து

ad

ad