நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
-
31 ஆக., 2015
எதிர்க்கட்சி தலைவராக யாரை வேண்டும் என்றாலும் நியமித்து கொள்ளவும்: ஜனாதிபதி [ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 08:16.04 AM GMT ] நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்வது நாடாளுமன்றத்திற்கு உரிய ஒரு விடயமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் கருத்திற்கமைய நாடாளுமன்றத்திற்கு பொருத்தமான எதிர்க்கட்சி தலைவரை நியமித்துக் கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)