வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கடந்த வருடம் நவம்பர் 8 ம் திகதி ஒருங்கிணைந்த வடகிழக்குக்குள் மீளப் பெறமுடியா சமஸ்டியை வலியுறுத்தி பிரகடனத்தை வெளியிட்டோம். இந்நிலையில் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் வரவேற்கின்றோம் என வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர் |
-
3 ஜன., 2023
வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தை - போராட்டங்களை நடத்த முடிவு!
ரெலோ, புளொட் கடிதம் - சம்பந்தன் உடனடியாக பதிலளிக்க மறுப்பு!
தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எழுதிய கடிதம் நேற்று மாலை கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் அவசரப்பட்டு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார் |
மார்ச் 4ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்?
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. |
யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் அழைப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தந்தை செல்வாவுக்கு அருகே நாபா, உமாவுக்கு சிலைகள்!
வவுனியா நகர மத்தியில், தந்தை செல்வாவின் சிலைக்கு அருகாமையில், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா மற்றும் புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் ஆகிய இருவருக்கும் சிலை வைப்பதற்கான கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதற்கான அனுமதி, வட மாகாண ஆளுநரிடம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. |
கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தயார்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார் |
4 நாள் குழந்தையின் சடலம் நாய்கள் தின்ற நிலையில் மீட்பு!- பெண் கைது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் தின்ற நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் 34 வயதான பெண் ஒருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் |
கடவுச்சீட்டு இல்லாமல் ஐரோப்பாவுக்குள் நுழைய குரோசியாவை ஏற்றுக்கொண்டது ஐரோப்பிய ஒன்றியம்
2023இல் டொரண்டோவில் பிறந்த முதல் குழந்தை சஞ்ஜித்
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு டொரண்டோவில் பிறந்த சஞ்ஜித் என்ற குழந்தை, 2023 ஆம் ஆண்டில் பிறந்த நகரின் முதல் குழந்தைகளில் ஒன்றாகும். நோர்த் யோர்க் பொது மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தையை பெற்றெடுத்த மதியழகன் குடும்பத்தை வாழ்த்தி மற்றும் படத்தையும் வெளியிட்டுள்ளது நோர்த் யோர்க் பொது மருத்துவமனை |
இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை மறுசீரமைப்பு!
அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர் நியமன நடவடிக்கைகளை இம்மாத இறுதிக்குள் நிறைவுப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. |
அமெரிக்க குடியுரிமைக்கு கோட்டா மீண்டும் விண்ணப்பம்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் டிசம்பர் 2022 இல் இலங்கையை விட்டு வெளியேறினார், தற்போது விடுமுறையில் டுபாயில் இருக்கிறார். |