புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2022

கோட்டாபய பிறப்பித்த தடையை நீக்கிய ரணில்!

www.pungudutivuswiss.com

2022 ஆகஸ்ட் 5ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடையை இலங்கையின் நிதி அமைச்சகம் நீக்கியுள்ளது. நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்ட வர்த்தமானியின் அடிப்படையில் தடைப்பட்டியலில் இருந்து கிளைபோசெட் நீக்கப்பட்டுள்ளது.

2022 ஆகஸ்ட் 5ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடையை இலங்கையின் நிதி அமைச்சகம் நீக்கியுள்ளது. நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்ட வர்த்தமானியின் அடிப்படையில் தடைப்பட்டியலில் இருந்து கிளைபோசெட் நீக்கப்பட்டுள்ளது

காமன்வெல்த்: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் - சாத்விக், சிராக் இணை தங்கம் வென்றனர்

www.pungudutivuswiss.com
டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்தியாவின் சரத் கமல் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின்

செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா!

www.pungudutivuswiss.com

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியுள்ளது. 8-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. ஓபன் பிரிவில் இந்தியா 1-வது அணி, வலுவான அர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-வது அணி 1½-2½ என்ற புள்ளி கணக்கில் அர்மேனியாவிடம் வீழ்ந்தது. இந்திய அணியில் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, நாராயணன் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் டிரா கண்டனர்.

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியுள்ளது. 8-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. ஓபன் பிரிவில் இந்தியா 1-வது அணி, வலுவான அர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-வது அணி 1½-2½ என்ற புள்ளி கணக்கில் அர்மேனியாவிடம் வீழ்ந்தது. இந்திய அணியில் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, நாராயணன் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் டிரா கண்டனர்

தங்கம் வென்ற பிவி சிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

www.pungudutivuswiss.com

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் பிவி சிந்து தங்க பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் பிவி சிந்து தங்க பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்

அமெரிக்கா – சீனா இடையே ஹைடெக் போர் சூடுபிடிப்பு : தைவான் சிப் தயாரிப்பு நிறுவனங்கள் மீது குறி வைத்துள்ள சீனா?

www.pungudutivuswiss.com
அமெரிக்கா – சீனா இடையே ஹைடெக் போர் சூடுபிடித்துள்ள சூழலில், தைவான் சிப் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கிய அங்கமாக இருக்குமென கூறப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் கறுப்பாடுகளை அனுமதிக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன் சீற்றம்!

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது.இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்றுகறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்துவருகின்றதினை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதன்தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது.இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்றுகறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்துவருகின்றதினை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதன்தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார்

இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி

www.pungudutivuswiss.com

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய மோதல் நிலைமை மேலும் தீவிரமடைந்தால் இலங்கை போன்ற வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், சர்வதேச நிதியங்களைப் பெறும் இலங்கையின் திறன் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பவித்ரா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய மோதல் நிலைமை மேலும் தீவிரமடைந்தால் இலங்கை போன்ற வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், சர்வதேச நிதியங்களைப் பெறும் இலங்கையின் திறன் மற்றும் கடன் மறுசீ

ad

ad