புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2013

ஆஸி’யுடனான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க அசோஷியேசன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியா வுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 
சிறிலங்காவில் ஐ.நாவின் முயற்சிகள் தோல்வி – பான் கீ மூனின் பேச்சாளர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கவும், போரை இடைநிறுத்தவும் ஐ.நா வலியுறுத்திய போதிலும், அந்த திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
முல்லைத்தீவில் புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பைலின் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சனல் 4 ஊடகவியலாளரா; தேடுதல் வேட்டை 
சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், இலங்கைக்கு வந்துள்ளதாகத் கிடைத்த தகவலையடுத்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.
UNP யின் ஒற்றுமையை ஏற்படுத்த பொருத்தமானவர் விக்னேஸ்வரனே! - அஸ்வர் எம்.பி. புகழாரம் 
ஐக்கியம் சீர் குலைந்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் கற்களுடனும் திரியும் ஐக்கிய தேசி யக் கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்த பொருத்தமானவர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனே, என ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாடு முடியட்டும்; கனடாவிற்கு இலங்கை எச்சரிக்கை 
கனேடிய பிரதமர் மற்றும் வெளிநாட்டமைச்சர் ஆகியோர் அண்மையில் இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கனேடிய இராஜதந்திரியை அழைத்து விளக்கம் கோரும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளாது என்று தெரிவிக்கின்றது

ad

ad