புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2018

ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்க முடியும் - ஜே.வி.பி. அதிரடி கருத்து

ஜனாதிபதி அரசியல் அமைப்பினை மீறி செயற்பட்டுவிட்டார். அவர் குற்றவாளி என்பது இப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

புங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த ஜனாதிபதி சடடத்தரணி கே .வி.தவராசா


சடடதுறையில் பல்லாண்டு காலம்  சேவையாற்றிய  25  சடடதனிகளை  இன்று  மாலை  ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி 

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர நடவடிக்கை

எதிர்வரும் 2019 மார்ச் மாதம் நடக்கவிருக்கிற ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையை சர்வதேச குற்றவியல்
ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த்

தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்


கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது கூட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு

கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை

வவுணதீவில் வவுணதீவில் காவல் துறையினரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள்

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

ரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு நேற்­றுக் கூடி ஆராய்ந்­த­போ­தும் அதில் எந்­த­வித முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை. நிரந்­த­ரத் தீர்வு கிடைக்­கும் வரை­யில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக இணைக்­க­வேண்­டும், அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்­தின் கீழ் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள காணி, பொலிஸ் அதி­கா­ரங்­கள் உட்­பட அனைத்து அதி­கா­ரங்­க­ளை­யும் உடன் வழங்­க­வேண்­டும் என்­பன உட்­பட 5 நிபந்­த­னை­களை நிறை­வேற்ற ரணில் இணங்­கி­னால் மட்­டுமே அவ­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கக் கூட்­ட­மைப்பு இணங்க வேண்­டும் என்று ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் ந.சிறி­காந்தா வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். அது பற்­றிப் பேசு­வ­தற்­கா­கக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு உடன் கூட்­டப்­ப­ட­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். இதை­ய­டுத்து உயர் மட்­டக் குழு கூட்­டப்­பட்­ட­போ­தும் அதில் இது தொடர்­பில் எந்­த­வி­த­மான தீர்­மா­ன­மும் எடுக்­கப்­ப­ட­வில்லை, நாளை­ம­று­தி­னம் 7ஆம் திகதி மீண்­டும் கூடி இது பற்றி விவா­திப்­பது என்­றும் முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார். ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கும் முடிவை ஏற்­க­னவே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எடுத்­தி­ருந்­தது. ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்தா இத­னைக் கடு­மை­யாக எதிர்த்­தி­ருந்­தார். இப்­ப­டிப்­பட்­ட­தொரு முக்­கி­ய­மான கொள்கை முடிவை கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எடுக்­கக்­கூ­டாது என்­றும் அதனை கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழுவே எடுக்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தில் நேற்று மாலை 5.30 மணி­யி­லி­ருந்து இரவு 8 மணி வரை­யில் கூட்­டம் நடை­பெற்­றது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இரா.சம்­பந்­தன், மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரும், புளொட் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­த­னும், ஆர்.ராக­வ­னும், ரெலோ சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் ந.சிறி­காந்தா, வினோ­நோ­த­ரா­த­லிங்­கம், எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கோவிந்­தன் கரு­ணா­க­ரம் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர். கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திக­திக்கு பின்­னர் நடை­பெற்ற சம்­ப­வங்­கள், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள நிலைப்­பா­டு­கள் தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார். ரெலோ அமைப்பு, ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக இருந்­தால் நிபந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே அது அமை­ய­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யது. அவற்­றுள் மிகச் சில­வற்றை முயற்­சிப்­ப­தற்கு எதிர்க் கட்­சித் தலை­வர் சம்­பந்­தர் இணங்­கி­னார் என்­றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரி­வித்­தார். தமது கட்­சிக்கு வழங்­கப்­பட வேண்­டிய தேசி­யப் பட்­டி­யல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வியை வழங்­கு­மா­றும் ரெலோ அமைப்பு அழுத்­த­மா­கக் கோரி­யுள்­ளது. நாடா­ளு­மன்­றக் கலைப்­புத் தொடர்­பான நீதி­மன்­றத் தீர்ப்பு வந்த பின்­னர் அதைப் பார்க்­க­லாம் என்று கூறப்­பட்­டுள்­ளது. எந்­த­வொரு முடி­வு­க­ளும் கூட்­டத்­தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. நாளை மறு­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை மீண்­டும் சந்­தித்­துப் பேசு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த்

தோண்டத் தோண்ட பல எலும்புக் கூடுகள்

மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பு

கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய

12ஆம் திகதி ரணில் பிரதமர்?

ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராவதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும்

ad

ad