புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2013


இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணை வேண்டும் : ஐ.நா மனித உரிமைச்சபையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


இலங்கைத்தீவினை மையப்படுத்திய அனைவரது பார்வையினையும் நோக்கியதாகவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

சுவிட்ஸர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர்  ஆரம்பமாகியது. 
ஐக்கியநாடுகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையில் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை இக் கூட்டத் தொடர் இடம்பெறும்.அத்துடன் இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை மார்ச் மாதம் 20

                       புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 
                                                   சுவிட்சர்லாந்து
                                           கண்ணீர் அஞ்சலி


                              செல்லத்துரை சத்தியமூர்த்தி
                                                                  (சனார்த்தன் )
                                       தோற்றம் :16.07.1948     மறைவு  24.02.2013

புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த சுவிசில் வசித்து வந்த சத்தியமூர்த்தி இறைவனடி இறந்து விட்டார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம் .அன்னார் ஊரதீவில் பிறந்து சுவிஸ் மண்ணில் சொலிகோவன் ,புரூக்டோர்ப் நகரங்களில் வசித்த காலப்பகுதியில் மக்களோடு அன்பாக பழகி அரிய  சேவைகளை செய்து  வாழ்ந்திருந்தார் .விருந்தோம்பலில் சிறப்புற்று விளங்கிய இவர் எல்லோரையும் அரவணைத்து நடப்பதில் இனிமையானவர் .ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயம் ,மடத்துவெளி பாலசுப்பிரமணியர்  ஆலயம், கமலாம்பிகை மகா  வித்தியாலயம் போன்றவற்றின் பணிகளை செய்வதில் முன்னின்று உழைத்தவர் .சுவிசுக்கு வந்த புதிதில் எண்பதுகளில் தமிழ் மக்களின் தாயக விடுதலைக்கான சேவையில் முன்னின்று கடுமையாக உழைத்து எமது ஊர் மக்களின் பாரட்டுதலை பெற்றிருந்தார் . இவரது சொந்த உறவினர்களின் தொகையே அதிகமாக இருந்ததனால் இவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வழிகாட்டியாகவே பார்த்து மகிழ்ந்திருந்தனர் மக்கள் .

அன்னாருக்கு எமது புங்குடுதீவு மக்கள் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் .அனைவரையும் இவரது இறுதிக் கிரியைகளில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்

புங்குடுதீவு மக்கள்  விழிப்புணர்வு ஒன்றியம்.
சுவிட்சர்லாந்து
24.02.2013






இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மேலும் இரண்டு கண்கண்ட சாட்சிகள் முன்வந்துள்ளதாக தெ இன்டிபென்டன்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட

இலங்கையின் ஊடகஇணையம் மீது ஊடறுப்பு தாக்குதல்! இணையத்தில் போர்குற்ற காட்சிப்பதிவுகள்! அதிர்ச்சியில் இலங்கை
இலங்கை அரச கட்டமைப்பு இணையத் தளங்கள் மீதான இனந்தெரியாத நபர்களின் ஊடறுப்பு தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்நிலையில், இன்று இலங்கை அரச ஊடக இணையம் ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கைக் குழு நவனீதம்பிள்ளையை சந்திக்குமா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள்

இலங்கையில் பொதுமக்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்கிறது; ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு
இலங்கையில் தொடர்ந்தும் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படும் நிலை தொடர்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்திய வீட்டுத்திட்டம் போரால் பாதிப்படைந்தவர்களுக்கா அல்லது வீடற்ற இலங்கையருக்கா இந்திய உயர்ஸ்தானிகரிடம் பாதிப்படைந்த மக்கள் கேள்வி
வவுனியா நெல்லி ஸ்டார் கோட்டலில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் வவுனியா மீள்குடியேறியோருக்கான நலன்பேணும் அமைப்பு, வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின்

அமைச்சர் டக்ளஸினால் பிற்போடப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெற்றது
பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. இந்திய தூதுவர் ஆசோக் கே. கந்தா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைததார்.
ஐ.நாவுக்கு இலங்கை ரகசியமான அறிக்கை; பான் கீ மூனிடம் நேரில் வழங்கினார் பாலித
இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை நிராகரிக்கும் இரகசிய அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச் செயலர் பான் கீமூனிடம் இலங்கை அரசு கையளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலி.வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பகுதிகள் எதுவும் விடுவிக்கப்படமாட்டாது


வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினரின் வசமுள்ள பகுதிகளை விடுவிக்க முடியாது என மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இராணுவத்தினரின் வசமுள்ள பெரும்பாலான காணிகள்

புலிகளை அழிப்பதற்கு உதவிய இந்தியா இன்று இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறது


விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவிய இந்தியா இன்று இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகத் தெரிவித்த யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
96ஆவது தடவையாக நடைபெற்ற இப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.


ஆஸி.க்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி வலுவான நிலையில்


சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் நேற்று சனிக்கிழமை வந்திருந்ததாக நுவெரலிய மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்தார்.
சுமார் 20 கிலோமீற்றர் தூரத்திற்கு அட்டன் - மஸ்கெலிய வரை வாகன நெரிசல் நீண்டு காணப்பட்டுள்ளது. சரியான போக்குவரத்து முறையில்லாத காரணத்தினாலேயே இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவிலானோருக்கு சிவனொளிபாத


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இரண்டு நாள் விஜயம் மேற்கெண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் பலாலியில் அமைக்கப்பட்டுள்ள 33 இந்திய படையினரின் நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.


களைகட்டியது கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால திருநாளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்துகொண்டு திருநாள் வழிபாடுகளில் ஈடுபட யாழ். ஆயர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை சுவிற்ஸர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.
எமது விசேட செய்தி சேவை 24 மணி நேரமும் வழங்கி கொண்டிருக்கும் 
நாளை ஆரம்பமாகும் இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மீனவர்களின் உரிமைகளை வலியுறுத்தி இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கச்சதீவில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட இரு நாட்டு மீனவர்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துள்ளதுடன் இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

ad

ad