புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


நடைபெற்று முடிந்திருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்திருக்கும் 4 ஆசனங்கள் தொடர்பிலும், முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதிலும் தற்போது பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்களிப்புத் தினமான செப்டம்பர் 08ம் திகதி மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரி ஆகிய இரண்டு வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான முகவர்களும், அதிகாரிகளும், போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் நிறைந்து காணப்பட்டனர்.

புதிதாக அமையப்போகும் மாகாண சபையின் முதலமைச்சாராக இரண்டாவது தடவையாகவும் பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனே நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வாட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
கிழக்கின் முதலமைச்சராக தமிழர் ஒருவரே இருக்கவேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிவிருப்பின்பேரில் பிள்ளையான எவ்வித தடங்கலும் இன்றி நியமிக்கப்படுகின்றார் என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றது. 
லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார்
இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன.  இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் யாருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்ற தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதுந்திர முன்னணியுடனா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனா இணைந்து ஆட்சி அமைப்பது என்பது பற்றி   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்றும் இன்றும் கூடி ஆராய்ந்து

ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவாநந்தா நீதிமன்றில் நேரடியாக ஆஜராக வேண்டும்: தமிழக அரசாங்கம் கடும் நிலைப்பாடு
கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, சென்னை மேல்நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.

சர்வதேச நாடுகளின் அழுத்தம்! கிழக்கில் தேசிய அரசு அமைப்பதற்கு மகிந்த அரசு முயற்சி!
கிழக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கி உள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.

ஆளும்தரப்பு குட்டுக்களை அம்பலப்படுத்தும் கிழக்கு தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள்!
கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கத்திற்கு பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சில நபர்கள் குறித்த உறுப்பினர்களைச் சந்தித்த போதிலும் அவர்களது முயற்சி பயனளிக்கவில்லையென தெரியவருகிறது.


கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் போலீசார் மோதல்


ஜவுளி ஆலையில் தீ விபத்து: 100 பேர் கருகி பலி

பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள பால்டியா பகுதியில் ஆடை தயாரிப்பு (ஜவுளி) தொழிற்சாலை உள்ளது.   அங்கு ஏராளமானவர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அங்குள்ள 2-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. 

அந்த நெகிழ்ச்சியான தருணங்கள்...............

நான் விடைபெருகிறேன், என்னால் தான் உங்களுக்கு இத்தனை இடையூறுகள், நிமிடங்கள்,நாட்கள், மாதங்கள், வருடங்கள் என கடந்து போராட்டம் தொடருகிறது...................

சராசரி மக்களின் அன்றாட வாழ்க்கை அத்தனையும் தொலைத்து ஆதரவற்று இங்கே கிடக்கிறீர்கள்..........நான் விடை பெருகிறேன்.....


கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாத அரசாங்கம், வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளின் வீடுகளுக்குச் சென்ற இலங்கை அரசின் உயர்மட்ட பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர், அரசாங்க கட்சிக்கு ஆதரவு வழங்கினால் பல கோடி ரூபா பணமும் கொழும்பில் வீடும் தருவதுடன் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் தொடரும்: வைகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, கரூரில் மதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டக்ளஸ் தேவானந்தா போர்த்திய பொன்னாடை தனது இசைப் பயணத்தில் கரும்புள்ளி; பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன
டக்ளஸ் தேவானந்தா போர்த்திய பொன்னாடை தனது இசைப் பயணத்தில் கரும்புள்ளி; பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன்
யாழில் தனக்கு டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்திய சம்பவம் தனது இசைப் பயணத்தில் கரும்புள்ளியாக விழுந்துவிட்டது என தமிழகத்தின் பிரபல பின்னணிப்
கருணாவின் சகோதரி வரலாறு காணாத படுதோல்வி
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள்

கூடங்குளம் சம்பவம்: தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மறியல்



கோவை காந்திபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர்.

கூடங்குளம்: சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய ஆதரவாளர்கள்
எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.இது தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தடியடியை கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து

சென்னையில் பட்டப்பகலில் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை!
 வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞரும் தற்கொலை!
சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். அவரை குத்திக்கொன்ற காதலனும் தன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டதால் அவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

உதயகுமார் சரணடைய மறுப்பு
கூடன்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் சரணடைய மறுப்பு தெரிவித்துள்ளார்.

எங்கள் போராட்டம் அறவழியில் தொடரும் : உதயகுமார்
கூடன்குளத்தில் நேற்றைய தினம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் நடந்த வாக்குவாதத்திற்கு பின்பு, காவல்துறையினர் அந்த மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் களைத்தனர்.


உலக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்!
 பாடகர் உன்னி கிருஷ்ணன் பேட்டி!
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்றமுஸ்லிம் காங்கிரஸ்  கூட்டம் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் நாளை கூடுவதென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலையில்

கிழக்கு மாகாண சபைக்கு அண்மையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேற்றிரவு சென்ற சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர்.  

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு கொழும்பிலிருந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்திருக்கிறோம் என கூறிக்கொண்டு சிலர் சென்றுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்தவர்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து கிழக்கு மாகாணசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட 11 உறுப்பினர்களும் திருகோணமலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான அவசர கூட்டம் இன்று இரவு திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. ஆர்.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்

மோசடிகள் இடம்பெறாவிட்டால் த.தே.கூ. 12 ஆசனங்களை பெற்றிருப்போம்- சம்பந்தன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில்
அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட மேலும் 53 பேர் திருகோணமலையில் கைது
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 53 பேர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று ஐக்கிய அமெரிக்க பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையின்படி இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க பாராளுமன்றில் விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழீழ விடுதலைப் புலிகளினால் வவுனியா பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட பணம் 20 கோடி ரூபா பணம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பணத்தையும் ஆயுதங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு, ஹவலொக் டவுனில் நிறுத்தி வைக்கப்பட்ட காரொன்றிலிருந்து சடலமொன்றை கண்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் எமக்கும் கிடைத்த தகவலொன்றின்படி கொழும்பு, ஹவலொக் டவுனில் அமைந்துள்ள தனியார் சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற காரொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை கண்டெடுத்தோம்.


தொழில் பறிபோனாலும் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 
முடிந்தால் தம்மை பணி நீக்கம் செய்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சவால் விடுத்துள்ளனர்
கடைசி டி20: ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜனாதிபதி மகிந்த, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதி சந்திப்பார்: பீரிஸ்
இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்திய புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ad

ad