புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014

கைவிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் – நியுயோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக, நியுயோர்க் ரைம்ஸ் நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழ்
வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலை கொண்ட காலம் முதல் தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள்கடந்த 30 வருடங்களாக தமிழ்நாட்டில் அகதிகளாகவே வாழ்கின்றனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர்களுக்கு ஒரு விடிவு பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த போதும் அவர்களின் எதிர்பார்ப்பும் கனவும் நிராசையாகவே போகிறது.
மேலும் இலங்கை தமிழர்கள் ஆங்கில மொழி அறிவு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை கொண்டிருக்கின்ற போதும், இன்னும் அவர்கள் கூலித் தொழிலாளர்களாக பணியாற்ற வேண்டிய நிலை காணப்படுகிறது.
இந்த முறையும் தமிழ்நாட்டில் வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் கைவிடப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான எந்த முன்னேற்ற அறிவிப்புகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

ad

ad