புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014

இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து கேரளாவை வீழ்த்தியது கோவா
இந்தியன் சுப்பர் ‘லீக்’ (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் 41-வது லீக் போட்டி கோவாவில் உள்ள ஜவர்ஹலால் நேரு மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற் றது.

இதில் கோவா அணி கேரளாவை எதிர்கொண்டது.

கோவா அணியினர் அடிக்க முயன்ற பல கோல் வாய்ப்புகளை கேரள அணியின் கோல் கீப்பர் அருமையாக தடுத்து கோவா அணியினர் கோல் போடுவதற்கு முட்டுக் கட்டை போட்டார்.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் போட முடியவில்லை.

இரண்டாவது பாதியிலும் கோவா அணியினரின் கையே ஓங்கி இருந்தது. அந்த அணியின் ஸ்லேபிக்கா 63-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

அதனைத்தொடர்ந்து 69-வது நிமிடத்தில் சந்தோஷ் ஒரு கோல் அடித்தார். கேரளா அணியினர் சுதாகரிப்பதற்குள் ஸ்லேபிக்கா 79-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் கோவா அணி 3-0 என முன்னிலை பெற்றது.

மூன்று கோல்களுக்கு எதிராக கேரளா அணியினரால் ஆட்டம் முடியும் வரை எதிர்கோல் போடமுடியவில்லை. இதனால் கோவா அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற
து

ad

ad