புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2015

அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இணைந்து வடக்கு முதல்வருக்கு மகஜர்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான தமது தந்தையரை விடுதலை செய்யக் கோரி, இரணை இலுப்பைக்குளத்தில்
சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.இதேபோன்றதொரு ஆர்ப்பாட்டம் செட்டிகுளத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சிறுவர் தினவாரம் தற்போது அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டியே தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 
இதேவேளை நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் தமது தந்தையரை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு எதிரில் இடம்பெறவுள்ள இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொள்ளும் சிறுவர்கள் அங்கிருந்து முதலமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று தமது தந்தையரை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோரும் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
                            

ad

ad