புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2016

பலத்த பாதுகாப்பு மத்தியில் பிள்ளையான் கிழக்கு மாகாண சபை அமர்வில்

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று நடைபெறுகின்ற
கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிவநேசதுரை சந்திரகாந்தன் திருகோணமலையிலுள்ள மாகாண சபை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டெம்பெர் 29ஆம் நாளன்று நடந்த மாகாண சபை அமர்வில் இறுதியாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டிருந்தார்.
ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை இன்றைய தினம் நடைபெறுகின்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், கடந்த 13ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

ad

ad