புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

சேர்த்து வைத்த பொருளை யாரிடம் தருவாள் என் மகள்...?' - மதுரை முத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு

" அன்புள்ள நட்புக்காக....

மனைவியிடம் அன்பு காட்டி வாழ்க. 8 ஆண்டுகளில் என் மனைவி இறந்து விடுவாள் என்று தெரிந்திருந்தால் என் அன்பை அதிகம் காட்டி இருப்பேன். இன்னும் கொஞ்சி இருப்பேன். இறப்பு எல்லாருக்கும் உண்டு. என் மனைவிக்கு மட்டும் 30 வயதில் ஏன்?

சின்னக் குழந்தை என்ன பாவம் செய்தது.

இது கனவாக மாறும் என்று காத்திருந்தேன் ஒன்றையும் காணல.

என் சின்ன மகள், அம்மா பொருளை எல்லாம் சேர்த்து வைக்கிறாள். அம்மா வந்ததும் தருவாளாம்,  என்ன செய்ய...?

ஒவ்வொரு நாளும் சாகலாம் என்று இருக்கு.
 
 
ஆனால் என் மனைவிக்கு எதையும் செய்யல, பாவி நான். இந்த 2 குழந்தைகள் இல்லை என்றால் அப்போதே  என் மனைவிடம் போயிருப்பேன். நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் மக்களை சிரிக்கவைக்கும் நான்,  ஒரு நாள் கூட ஒரு நிமிடம் சிரிக்க முடியல....

என் முதல் ரசிகை போய்விட்டாள்

அழகிய மனைவி போய்விட்டாள்

என் சந்தோசம், மகிழ்ச்சி எல்லாம் ......தொலைந்தது....."
 
 
 
உலகையே சிரிக்க வைத்த மதுரை முத்து ஃபேஸ்புக் பதிவு இது. மனைவி போய் விட்டால் சகலமும் போய்விட்டது என்பது இதுதானோ?

ad

ad