புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2018

அலுவலகத்தில் பாலியல் தொல்லையினால் மனமுடைந்து விசித்திரமாக தற்கொலை செய்த பெண்……!!


அரச பெண் ஊழியர் ஒருவர் தன் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலதிகாரியின் பாலியல் தொல்லையே தற்கொலைக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி கோரளம்பள்ளத்தில் அரச ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி. இவர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் ஊரக வளர்சித்துறையில் பணிபுரிந்து வந்தார்.இவரின் கணவர் செந்தில்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தமிழ்ச்செல்வி தனியாக வசித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிமுடிந்த வீட்டிற்கு வந்த அவர் 2 நள் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரின் வீட்டுக்கதவை நீண்ட நேரம் தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. எனவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற பொலிஸார் சடலமாக கிடந்த பெண்ணை மீட்டு அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஏற்கனவே ஒருமுறை தமிழ்ச்செல்வி தற்கொலைக்கு முயன்று காப்பற்றப்பட்டார்.

எனவே, பாலியல் தொல்லை காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad