புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2018

உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதை எவராலும் முடி­யாது- யாழ். மாந­கர மேயர்!


எமது மக்­க­ளுக்­காக உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதைத் தடுக்­கும் உரிமை எவ­ருக்­கும் கிடை­யாது. நினைவு கூரு­வது என்­பது மக்­க­ளின் அடிப்­படை உரிமை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் இ.ஆனல்ட், அதி­கா­ரி­களை இலக்கு வைத்து வழக்­குத் தாக்­கல் செய்­வ­தன் ஊடாக பொலி­ஸார் சதி­யில் ஈடு­பட முயற்­சிக்­கின்­ற­னரா என்­றும் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

தியாகி திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஏற்­பாட்­டில் நடத்­து­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில், யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரால் அதனை தடுக்­கும் நோக்­கு­டன் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஆணை­யா­ளரை நீதி­மன்­றில் நாளை முன்­னி­லை­யா­கு­மா­றும் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் இ.ஆர்னோல்ட் நேற்று மாலை அனுப்பி வைத்­துள்ள பத்­தி­ரிகை அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

மாந­கர சபை­யின் முதன்மை நிறை­வேற்­றுப் பிர­தி­நிதி என்ற அடிப்­ப­டை­யில் இந்த வழக்­கா­னது மாந­கர முதல்­வ­ரின் பெயர் குறிப்­பிட்டே வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருக்­க­வேண்­டும்.

அரச உயர் அதி­காரி மீது வழக்­குத் தொடுக்­கப்­பட்­டி­ருப்­பது அரச நிர்­வாக இயந்­தி­ரத்­தைப் பயன்­ப­டுத்தி எமது மக்­க­ளின் வேண­வாக்­களை தடுப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் சதி முயற்­சி­யா­கவே எண்­ணத் தோன்­று­கின்­றது.

நாம் மக்­க­ளுக்­காக குரல் கொடுக்க வந்­த­வர்­கள். மக்­க­ளோடு தொடர்­புள்ள நிகழ்­வுக்கு, யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள மக்­கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கும், நிறை­வேற்று அதி­கா­ரப் பிர­தி­நி­தி­யாக, யாழ்ப்­பா­ணம் மாந­கர முதல்­வ­ராக நானும் இருக்­கின்­ற­பொ­ழுது இந்த விட­யங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­றும்­படி அரச அதி­கா­ரி­க­ளைப் பணிப்­பது சட்­ட­பூர்­வ­மா­னதா என்று எண்­ணத் தோன்­று­கின்­றது.

நினை­வு­நாள் ஏற்­பா­டு­களை மக்­க­ளின் விருப்­பின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேற்­கொள்­ளும். நீதி­மன்ற நடை­மு­றை­களை மதித்து இந்த விட­யங்­களை மாந­கர சபை சட்­ட­ரீ­தி­யா­கக் கையா­ளும்.

எமது மக்­க­ளின் விடு­தலை வேண்­டிய உணர்­வு­களை சட்­டத்­தைக் கொண்டு அல்­லது அதி­கா­ரத்­தைக் கொண்டு மழுங்­க­டிக்க முடி­யாது. தியாகி திலீ­ப­னின் நினைவு தினம் எவ்­வித மாற்­றங்­க­ளும் இன்றி நாம் எண்­ணி­யி­ருந்த அமைப்­பிலே இடம்­பெ­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் – என்­றார்.

ad

ad