கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இன்று காலை வாக்கெண்ணும் மத்திய நிலையத்திலிருந்து வாகனங்கள் மூலம் சகல வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான பி.எஸ்.எம். சார்ள்ஸ்
-
8 செப்., 2012
|
குடும்ப அரசியல் விவகாரம்! விரக்தியின் விளிம்பில் பசில் ராஜபக்ச! நாட்டைவிட்டு வெளியேறினார்
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பசில் ராஜபக்ச சரியாக செயற்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குடும்பம் குற்றம் சுமத்தியுள்ளது.
பதிலுக்கு பசில் ராஜபக்சவும் தனது பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அநாவசியத் தலையீடுகளை மேற்கொள்கிறார் என கோபித்துக்குக் கொண்டுள்ளாராம்.
இதன் விளைவால் பசில் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள பசில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகள் சார்பில் வாதாடும் சுவிஸ் சட்டவாளர்களுக்கு இலங்கை நுழைவிசைவு வழங்க மறுப்பு
விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புக்கு எதிரான வழக்கில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய சுவிற்சர்லாந்து அரச சட்டவாளர்கள் இந்த வாரம் கொழும்பு வரவுள்ளனர்.
சுவிற்சர்லாந்து அரச சட்டவாளர்கள், இலங்கையில் தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகளிடம் இந்த வாரமும் அடுத்த வாரமும் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
எனினும், இந்த விசாரணைகளில் பங்கேற்க கொழும்பு வருவதற்கு எதிர்தரப்பு சட்டவாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்து விட்டது.
அரச சட்டவாளர்களுடன் ஐந்து காவல்துறை அதிகாரிகள், இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் கொழும்பு வரவுள்ளனர்.
எதிர்த்தரப்பு சட்டவாளர்களுக்கு இலங்கை அரசு நுழைவிசைவு வழங்க மறுத்து விட்டதால, அவர்கள் பேர்ணில் இருந்தவாறு சாட்சிகளிடம் நடத்தப்படும் குறுக்கு விசாரணைகளில் நேரலை காணொலி தொழில்நுட்பம் மூலம் பங்கேற்கவுள்ளனர்.
இதன் மூலம் சாட்சிகளிடம் அவர்கள் கேள்விகளை எழுப்ப முடியும்.
இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் விடுதலைப் புலிகளின் சட்டவாளர்களுக்கு நுழைவிசைவு வழங்க இணங்கிய போதும், இலங்கை வெளிவிவகார அமைச்சு தலையிட்டு அதை நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 செப்., 2012
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 6 உறுப்பினர்களையும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டால் மொத்தம் 13 உறுப்பினர்கள் கிடைக்கும்.THINAKATHJIR
அண்மைக்கால தேர்தல்களில் கிழக்கு மாகாணசபை தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் என அனைத்து தரப்பிற்குமே சவால் நிறைந்ததாகவே அமைந்துள்ளது.
கிழக்கில் நீதியான தேர்தலை உடனடியாக உறுதிப்படித்துக; அரசின் வன்முறை குறித்து சம்பந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம் |
நீதியானதும், நியாயமானதுமான தேர்தலொன்றை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்கும், சட்டவிரோதமான வகையில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும் உடனடி |
ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
நல்லூர் பிரதேச சபையால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கமைய விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்ட ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றத்திற்கு வரத் தவறியுள்ளதால் அவரைக் கைது செய்யுமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் அகிலதாஸ் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்! வடக்கின் வசந்தம்
கொக்குவில் இந்துக் கல்லூரியில் சிங்கமாகக் கர்ச்சித்துக் கொண்டிருந்த அதிபர் அகிலதாஸ் கொக்குவில் இந்துக் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணமாக பெருமளவு பணமோசடி என கல்லூரியை விட்டு அவரை அகலச் செய்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளை முழுமையாக தோற்கடித்து விட்டீர்களா என கோத்தபாயவிடம் போலந்து கேள்வி
போலந்துக்கான இலங்கைத் தூதரகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் தற்போது போலந்துக்கு விஜயம் செய்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)