புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2012



புனேவில் நடந்த முதல் "டுவென்டி-20 போட்டியில், இந்திய அணி இங்கிலாந்து அணியை 5 விக்‌கெட் வித்தியாசத்தில் வென்றது
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 2 "டுவென்டி-20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என இங்கிலந்து வென்றது. இரு அணிகள் பங்கேற்கும் முதல் "டுவென்டி-20 போட்டி புனேவில் இன்று நடக்கிற

 T3 வீதித் தொடருந்தின் இரண்டாவது பகுதி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Porte D'Ivry முதல்  Potre de la Chapelle வரை 14,5 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யயும் இந்த T3 வீதித் தொடருந்து பிரபல அரசியல்வாதிகளின் பயணத்தோடு இன்றைய தனது முதற் பயணத்தைத் தொடங்கியது. 

இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைகளுடன் இணைந்து இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினர், இரகசிய கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நஹான் சிறப்புப்படை பயிற்சி நிலையத்திலேயே இந்தப் போர்ப்பயிற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஜெனரல் பிக்ரம் சிங், ஜனாதிபதிக்கு புத்தர் சிலையொன்றைக் அன்பளிப்பு செய்ததுடன், இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியாவினால் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று உறுதியளித்தார். ஐந்து நாள்

வெள்ளத்தில் மிதக்கிறது மட்டக்களப்பு ; உயிரிழப்பு 22ஆக உயர்வு

நாட்டில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் வெள்ளம், மண்சரிவு, மரம் முறிவு ஆகியவற்றில் சிக்கி நேற்று மாலை வரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் வாள் வெட்டுக்கு இலக்கு
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி : நாசா விஞ்ஞானி

 

மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது. மேலும் குறுந்தகவல், ஈமெயில்

20 டிச., 2012


கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை (படங்கள்)

thx nakeeran

England 157/6 (20/20 ov)
India 158/5 (17.5/20 ov)
India won by 5 wickets (with 13 balls remaining)

வடமராட்சி கிழக்கு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து குறித்த சிறுமி குறித்த சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் தமது பெற்றோருக்கு சிறுமி அறிவிக்கவில்லை.


தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை தமிழர் ஒருவர் பரிதாபமாக பலி
மின்விளக்கை அணைப்பதற்காக முயன்ற இலங்கைத் தமிழர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்!
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும்  விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம்  இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது..
கணவர் மகாதேவன் தற்கொலை செய்தது குறித்து தகவல் அறிந்ததும் நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். 

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாகிறார். அகமதாபாத்தின் புறநகர் பகுதியான மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட குஜராத் முதல்- மந்திரி மோ
குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மை இடங்களை பாரதீய ஜனதா கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. து. பா.ஜனதாவின் இந்த வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் கட்காரி நன்றி தெரிவித்துள்ளார்.


கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை!
சென்னை கோட்டூர்புரம் அடையாறு பாலத்திற்கு விலை உயர்ந்த ஆடம்பரமான கார் ஒன்று இன்று (20.12.2012) மதியம் 12.45 மணி அளவில் வந்தது. அந்த கார் திடீரென அடையாறு பாலத்தில் நின்றது. 


மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடி
குஜராத் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்த-ன் வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. இதில் காலை முதலே பாஜக முன்னிலை பெற்றிருந்தது.

பாஜக 109 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடி என்று பாஜகவினர் கூறுகின்றனர்.

வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டவர்களை காப்பாற்றிய பெண்மணி

வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட ஐவரை பெண்மணி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கெக்கிராவ ஆண்டியாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவ பலாகல பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சென்ற ஜீப் வண்டி நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்.எம். நிலந்தி ரத்நாயக்க (35 வயது) என்ற ஒரு குழந்தையின் தாய் குறித்த நபர்களை காப்பாற்றியுள்ளார்.
மேற்படி அதிகாரிகள் நிவாரணப் பணிகளுக்காகச் சென்ற போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.



குஜராத்: 107 தொகுதிகளில் பாஜக முன்னிலை
பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் கடந்த 13 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (19.12.2012) காலை தொடங்கியது.
பாஜக 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் கோசுபாய் பட்டேல் தொடங்கிய குஜராத் பரிவர்த்தன் கட்சி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 



இமாச்சலப் பிரதேசத்தில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை
முதல்வர் பிரேம்குமார் துமல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்த-ல் 74.6 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

ad

ad