புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2013


திண்டுக்கல் :கணவனுக்கு விஷமாத்திரை கொடுத்து மனைவி தற்கொலை
 திண்டுக்கல் அடுத்த குஜிலியம்பாறை அருகே உள்ள தி. கூடலூர் ஊராட்சிக் குட்பட்ட திருமக்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது55). இவரது மனைவி லட்சுமி (52). இவர் களுக்கு மணிவேல் என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக
லட்சுமிக்கு மனநிலைபாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
அவர் அடிக்கடி தனது கணவரிடம் நான் சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சாப்பாட்டில் விஷமாத்திரைகளை கலந்து தனது கணவருக்கு கொடுத்
தார். பின்னர் லட்சுமியும் வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். இதில் லட்சுமி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ராஜலிங்கம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த மணிவேல் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராஜலிங்கத்தை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமி மனநிலை பாதிக்கப் பட்டவரா? அல்லது குடும்ப பிரச்சனையில் கணவருக்கு விஷமாத்திரைகளை கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad