புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2013


மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனிதத் தலைகள் 79!!

மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் இதுவரை 79 மனித தலைகளும் 78 மனித உடற் பாகங்க எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக மண்ணை அகழும் வேளையில் மனித உடற் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்பின்னதாக கட்டட பணிகள் நிறுத்தப்பட்டு, உடல் பாகங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பமானது.

இங்கு எடுக்கப்பட்ட தலை மற்றும் உடற்பாக எச்சங்களை மூன்று சட்ட வைத்திய அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த எச்சங்கள் காலநிர்ணய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த எலும்புக் கூட்டு எச்சங்கள் குறித்து மேல்கொள்ளப்பட்ட தொல்பொருள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் இவை மிக அண்மைக்காலத்தில் புதைக்கப்பட்டுள்ளன என உறுதியாக கூறப்பட்டுள்ளது.

ad

ad