புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013


சென்னையில் ராணுவ பயிற்சி மையம் முற்றுகை! ஈ.த.மாணவர் முன்னணி அறிவிப்பு!
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி யின் தொடர் நடவடிக்கையாக, ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து, 20 .03.2013 புதன்கிழமையன்று காலை 11.00 மணியளவில், பரங்கிமலையில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.

1`) ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரும் மோசடியான தீர்மானத்தை எதிர்க்கிறோம்!

2) ஈழப்போரை முன்னின்று வழிநடத்திய போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் பங்காளியான காங்கிரசு கும்பலிடமே இராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோருவது அயோக்கித்தனமானது.
3) இராஜபக்சேவை சர்வதேசப்போர்க்குற்றவாளியாக அறிவித்து, ஹிட்லரின் படைகள் உள்ளிட்ட இரண்டாம் உலகப் போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 
4) ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ad

ad