அன்புமணி ராமதாஸ் ஜாமீனில் விடுதலை : தொண்டர்கள் உற்சாக வரவேற்ப
பிரம்மதேசம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். அந்த வழக்கிலும், பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திருக்கழுக்குன்றத்திலும், கடந்த ஆண்டு வன்னியர் இளைஞர் சித்திரை திருவிழாவில் பேசியது தொடர்பாக என மொத்தம் 3 வழக்குகள் அன்புமணி ராமதாஸ் மீது பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (09.05.2013) பிற்பகல் இந்த 3 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது கோர்ட். இதையடுத்து மத்திய புழல் சிறை வாசலில் பாமகவினர் பெருந்திரளாக வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.