திராணியிருந்தால், தைரியமிருந்தால் ஜெயலலிதா பதில் சொல்லட்டும் :
ஸ்டாலின் ஆவேசம்திமுகவின் 10வது மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் இன்று சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் திரண்ட இப்பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றும்போது, ‘’திருச்சியில் நடைபெறும்
’’அதிமுக அரசின் நிர்வாகச்சீர்கேடுகளால் மக்கள் எண்ணற்ற துயரங்களை சந்தித்து வருகின்றனர். அரசே குடிநீரை விற்கும் செயல் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது.
ஆளுநர் உரைக்கு பின் 3 நாள் மட்டுமே அவை நடைபெறும் என அறிவித்திருப்பது வியப்பளிக்கிறது. பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதா?’’ என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’தமிழகத்திலிருந்து 12 ஆயிரம் கோடி முதலீடுகள் கர்நாடகம் செல்ல காரணம் ஜெயலலிதா. இது குறித்து சட்டமன்றத்தில் பேச நிச்சயம் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள்.
ஆனால் செய்தித்தாள்களை படித்துவிட்டு, தெம்பிருந்தால், திராணியிருந்தால், தைரியமிருந்தால் ஜெயல லிதா பதில் சொல்லட்டும்’’ என்று ஆவேசமாக கூறினார்.