புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2014


கட்டாரில் இடம்பெற்ற வாகன வித்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அந்நாட்டில் தொழில் நிமித்தம் வசித்து வந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 9 ஆ
ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருச்செல்வம் யோக்கோப்பு (49) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 14.01.2014 அன்று டோகா-கட்டாரில் சல்வா வீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் படுகாயமுற்ற நிலையில் ஹமாத் வைத்திய சாலையில் (Hamad Hospital) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் 16.01.2014 மாலை 06.40 மணிக்கு சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது உடல் தற்போது மேற்ப்படி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ad

ad