புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

மகிந்தவுக்கு மைத்திரிபாலவின் கோட்டைக்குள் இடம் இல்லை!
பொலனறுவை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாதைகள் முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று நண்பகல் பொலனறுவை சோமாவதிய விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும் பொலிசாரும் பொலனறுவையில் நிலைகொண்டுள்ளனர்.
எனினும் இவர்களைக் கண்டு அஞ்சாமல் சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஆதரவாளர்கள் பகிரங்கமாக களமிறங்கி ஜனாதிபதியின் பதாதைகளை அகற்றியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக அறிந்தவுடன் பொலனறுவைக்கான தனது விஜயத்தை ரத்து்ச் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரவு செலவுத்திட்ட வாக்களிப்பின் பின்னர் அங்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad