புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்தவால் மட்டுமே முடியும்!- டக்ளஸ்T ]
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும். தமிழ் பேசும் மக்களின் ஒத்துழைப்புடன் அவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆக தெரிவாவார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான நேற்று நிதி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய அவர், இங்கு மேலும் தெரிவித்ததாவது,
வடமாகாண சபைக்கு நிதி ஒதுக்குவதில்லை என்று குற்றஞ்சாட்டும் த.தே.கூ வரவு செலவுத் திட்டம் குறித்து ஆராய திறைசேறி செயலாளர் அழைத்த போது அதை நிராகரித்தது.
வடபகுதி மக்கள் பட்டினியில் வைத்திருப்பதையே த.தே.கூ விரும்புகிறது.
2020ம் ஆண்டு வரையான இலக்குகளை கருத்திற்கொண்டே இந்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
2015 வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வட மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 31 வீதம் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் த.தே.கூ அரசாங்கம் நிர்மாணித்த வீதிகளை தாமே நிர்மாணித்ததாக கூறுகிறது.
தமிழ் மக்களை அரசியல் ரீதியில் அநாதரவாக்கி விட்டு தாம் மட்டும் த.தே.கூ. முயல்கிறது. எமது மக்களின் நிலம் எமது மக்களுக்கே சொந்தமானது,
எஞ்சிய மக்களும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.
தேர்தல் காலத்தில் வெறும் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வழங்கும் த.தே.கூ ஒரு போதும் அவற்றை நிறைவேற்றுவது கிடையாது.
எமது அரசியல் உரிமையில் முதலாவது நடவடிக்கை 13வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவதாகும்.
அரசியல் தீர்வுக்கு 2/3 பெரும்பான்மை ஆதரவு கிடைக்க த.தே.கூ ஒருபோதும் முன்வராது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம்

ad

ad