புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2015

பாகிஸ்தான் அணி 178 ஓட்டங்களால் வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் அணி 178 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
 
இறுதி நாளான இன்று (26) 130 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இறுதி வரை சிறப்பாக ஆடி, போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிக்க முயன்ற போதிலும், தோல்வியைத் தழுவிக் கொண்டது.
 
பத்தாவது விக்கெட்டிற்காக, இறுதி வரை களத்தில் இருந்த ஆதில் ரஷித் 61 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் யாசிர் ஷாவின் பந்துவீச்சில், சுல்பிகார் பாபரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
 
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக, ஜொய் ரூட் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, பாகிஸ்தான் அணி சார்பில் சுல்பிகார் பாபர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
 
பாகிஸ்தான் 378 மற்றும் 354/6
இங்கிலாந்து 242 மற்றும் 312
178 ஓட்டங்களால் வெற்றி
 
இதன் அடிப்படையில் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1 - 0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கின்றது.
 
முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இத்தொடரின் 3ஆவது போட்டி எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad