புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2015

விக்னேஸ்வரன் பழுத்த அறிவாளி: யாழில் சிதம்பரம் புகழாரம்

தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு நாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த அவர் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது அமைதி ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
உண்மையில் வடமாகாண முதலமைச்சர் பழுத்த அறிவுடையவர். அவரிடம் நிதானமும், ஆற்றலும் சிறப்பாகவே இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad