ந்தியாவில் தொடரும் அதிக வெப்பமான காலநிலையினால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாத்திரம், 120இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சராசரியாக 40 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருவதாகவும் இந்த வெப்பநிலையானது எதிர்வரும் தினங்களில் 44 பாகை செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மதுரை, கோவை, திருநெல்வேலி, மாவட்டங்களில் கடும் வெயிலுடனான காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.