புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2016

பெண்கள் விடுதி குளியறையில் ரகசிய கேமரா: ஆபாச படமெடுத்து மிரட்டி வந்த போலி சிபிஐ அதிகாரி

சென்னை திருவான்மியூர் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான தாமோதரன். இவர், வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் கீழ் தளத்தில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது.

தாமோதரன், பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள குளியல் அறையில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவான்மியூர் போலீசாருக்கு பெண்கள் விடுதி நிர்வாகி தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவான்மியூர் போலீசார், தாமோதரனிடம் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் அவர், தான் சி.பி.ஐ.யில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருவதாக கூறினார். விசாரணை நடத்திய திருவான்மியூர் போலீசார் சிபிஐ அதிகாரி என கூறியதால் முதலில் பின்வாங்கினர். ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், தாமோதரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் தீவிரமாக நடத்திய விசாரணையில் தாமோதரன் போலி சி.பி.ஐ. அதிகாரி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

தாமோதரன் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடத்தினர். சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், வக்கீல், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என 3 போலியான அடையாள அட்டைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்த போலி அடையாள அட்டைகள், அவர் பயன்படுத்திய சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார், காவல்துறையின் இரண்டு சீருடைகள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவரது செல்போனில் விடுதியில் பெண்கள் குளிக்கும் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாமோதரனை போலீசார் கைது செய்து அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

தாமோதரனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறும்போது, தாமோதரன் சி.பி.ஐ.யில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாக போலியான அடையாள அட்டையை வைத்துக்கொண்டு சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரில் வலம் வந்து உள்ளார். தனக்கு அரசு வேலை கிடைத்து உள்ளதாக அவரது பெற்றோரையும் ஏமாற்றி வந்து உள்ளார். தாமோதரன் நாமக்கல்லை சேர்ந்தவர். இவரது தந்தை முருகன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். 

விடுதியில் தங்கி இருந்த பெண்களை தன் வலையில் சிக்க வைக்க குளியறையில் ரகசிய கேமரா பொருத்தியுள்ளார். தனது செல்போன் மூலம் அதனை பார்த்து அதை பதிவு செய்து பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதால் இந்த விஷயம் விடுதி நிர்வாகி மூலம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனி நபராக கடந்த ஒரு வருடாக இதனை செய்ய அவருக்கு துணிச்சல்லை என்று கருதிய போலீசார், இவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.  சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து வேறு ஏதேனும் முறைகேடு செய்துள்ளாரா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். 

ad

ad