புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2018

அமைச்சுக்களின் செயலர்களுக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட முடியாது

பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன இல்லாத சூழ்நிலையில், தனது அதிகாரத்தின் கீழ் இல்லாத அமைச்சுக்களின்
செயலர்களுக்கு, உத்தரவிடுவதற்கு சிறிலங்கா அதிபருக்கு அதிகாரம் கிடையாது என்று- முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களின் செயலர்களுக்கு மட்டுமே சிறிலங்கா அதிபரால் தற்போது உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்.
ஏனைய அமைச்சுக்களின் செயலர்களுடன் அவர் கூட்டங்களை நடத்துவதோ, அவர்களுக்கு உத்தரவிடுவதோ அரசியலமைப்பு மீறலாகும்” என்று கூறினார்.

ad

ad