இந்திய குடியுரிமை இல்லாததன் காரணமாக, பாதுகாப்பான தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவும் முடியாத நிலைமையில் ஈழ ஏதிலிகள் இருக்கின்றனர். இந்தநிலையிலேயே அவர்கள் இந்திய குடியுரிமையை கோருகின்றனர்.
ஏற்கனவே அவர்கள் இதற்காக விண்ணப்பித்திருந்த போதும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இந்திய குடியுரிமையை கோரி விண்ணப்பிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று, சென்னை மேல்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.